| யாவருமின்மையிற் கிணைப்பத் தாவது பெருமழை கடற்பரந்தாஅங் கியானும் ஒருநின் னுள்ளி வந்தனெ னதனாற் | | 15 | புலவர் புக்கி லாகிநிலவரை நிலீஇய ரத்தை நீயே யொன்றே நின்னின்றுவறுவி தாகிய வுலகத்து நிலவன் மாரோ புரவலர் துன்னிப் பெரியவோதினுஞ் சிறிய வுணராப் | | 20 | பீடின்று பெருகிய திருவிற் பாடின்மன்னரைப் பாடன்மா ரெமரே. |
(பி - ம்.) 5 ‘போருங்’ 9 - 10 ‘யாணாவரையணிப்’ 12 ‘கினபப’ 19 ‘பெரியவேத்தினுஞ்’ 21 ‘பாடிமன்னரை’ திணை - பாடாண்டிணை; துறை -வாழ்த்தியல். அவனை அவர். (கு - ரை.) 1.கதிர் - வெயில். சூழி - ஒருவகை நீர்நிலை. 3.பொதியில் ஒருசிறை - மன்றத்தினொருபக்கம். 4.மத்தளத்தைப் போன்ற அரையையுடைய பனையின் அரம் போன்றவாயினையுடைய மடல் ; “முழாவரைப் போந்தைப் பொருந்தி”, “மடல்வன் போந்தை” (புறநா.85 : 7, 297 : 10) ; “முழவுத்தாளெரிவேங்கை” (கலித்.44 : 4) 5. “நாரும் போழுஞ்செய்துண்டு” (புறநா.370 ; 2) 6. புகாஅ - புகுந்து. 7.ஊழ் - முறையே. உயவல் - வருத்தம். 8. புரவுஎதிர்ந்துகொள்ளும் - பாதுகாத்தலை ஏற்றுக்கொள்ளும். 9.பிரசம் - தேன்கூடு ; “பிரசந்தூங்கு சேட்சிமை” (அகநா.242 : 21) அறாஅ யாணர் - இடையறாத செல்வ வருவாயையுடைய ; பொருந.1, ந. 10.படப்பை - தோட்டம். 11. ஆஅய் : விளி. 13. மழை -மேகம். 14. நின்னுள்ளி - உன்னை நினைத்து. 15. புக்கில் -எப்பொழுதும் இருத்தற்குரிய வீடு ; “புக்கி லமைந்தின்றுகொல்லோ” (குறள்,340) 16. நிலீஇயர் - நிற்பாயாக ;அத்தை : அசை. 18 - 9. “துன்னி..............உணராவென்புழிப்பெரிய சிறியவென்பன பெருமை சிறுமைப்பண்படியாக வந்தமையின்,இவ்வெச்சத்தின் குறிப்பென்றலு மொன்று ; இவ்வெச்சப்பொருள்படும் உரிச்சொலென்றலு மொன்று”, “பெரியவோதினுமென்பதற்குச் சிறிய வோதினுமெனக் குறிப்பும்மறைவிகற்பமும் அறிக” (தொல்.வினை. சூ. 30, 38, கல்.) ;
|