“துன்னி.........உணராவென அகரம் வினைக்குறிப்புப்பற்றி வருவனவும்” (தொல்.வினை. சூ. 31, ந.) 21.பாடன்மார் - பாடுதலைத் தவிர்வாராக ; தொல்.வினை. சூ. 10,கல்,; ந. மேற். 20 - 21. தொல்.வினை. சூ. 10, சே.; இ - வி. சூ. 232, 239, உரை,மேற். 19 - 21. தொல்.இடை. சூ. 8, கல்.;நன். சூ. 326, மயிலை ; நன். வி.சூ. 327, மேற். (375) 376 | விசும்புநீத்த மிறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகியசிவந்துவாங் கந்தி சிறுநனி பிறந்த பின்றைச்செறிபிணிச் சிதாஅர் வள்பினென் றெடாரிதழீஇப் | | 5 | பாண ராரு மளவையான்றன் யாணர் நன்மனைக் கூட்டுமுத னின்றனென் இமைத்தோர் விழித்த மாத்திரைஞெரேரெனக் குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்றப் பண்டறி வாரா வுருவோடென்னரைத் | | 10 | தொன்றுபடுதுளையொடு பருவிழை போகி நைந்துகரை பறைந்தவென்னுடையு நோக்கி விருந்தின னளிய னிவனெனப்பெருந்தகை நின்ற முரற்கை நீக்கி நன்றும் அரவுவெகுண்டன்ன தேறலொடு சூடுதருபு | | 15 | நிரயத்தன்னவென் வறன்களைந் தன்றே இரவி னானே யீத்தோனெந்தை அன்றை ஞான்றினொ டின்றி னூங்கும் இரப்பச் சிந்தியேனிரப்படு புணையின் உளத்தி னளக்கு மிளிர்ந்ததகையேன் | | 20 | நிறைக்குளப் புதவின்மகிழ்ந்தனெ னாகி ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர்கடைத்தலை ஞாங்கர் நெடுமொழி பயிற்றித் தோன்றல்செல்லாதென் சிறுகிணைக் குரலே. | (பி - ம்.) 1 ‘விசும்பினீத்தமிறந்த’, ‘விசும்பிணியத்தமிறந்த’ 2 ‘மழுங்கிய’, ‘பழுனிய’, ‘மழகிய’, 2 - 3 ‘கந்திச்சிறுநனியிறந்த’ 4 ‘சிதாஅவளபின்’ 6 ‘பாணர்நன்.................நினறென’ 8 ‘மறையிருள்’ 10 ’போக்கி’ 13 ’மூரற்கைமிக்குநன்று’ 15 ‘வறங்’ 17 ‘நான்றினொடு’
|