திணை - அது; துறை - இயன்மொழி. ஓய்மான்நல்லியாதனைப் (பி - ம். ஆய்மானல், ஓய்மான் வில்லியாதனைப், ‘ஓய்மான்நல்லியக் கோடனை’) ப் புறத்திணை நன்னாகனார். (கு - ரை.) 1. விசும்புநீத்தம் - விசும்பாகிய நீத்தத்தை ; ‘நீத்தம்’என்றார் கடத்தற்கு அருமையின். இறந்த - கடந்த. 2. மழுகிய - ஒளி குறைந்த. அந்தி - மாலைக்காலம். 1 - 2. “சுடர்கெழுமண்டில மழுக ஞாயிறு, குடகடல் சேரும் படர்கூர் மாலை” (அகநா. 378 ; 14 - 5) 4. தெடாரி ; மோனைநோக்கி எகரமாயிற்று ; புறநா. 368 : 15. “சிதாஅர் வள்பிற்சிதர்ப்புறத் தடாரி” (புறநா. 381 : 12) 5. ஆரும் -உண்ணும். 6. யாணர் நன்மனை - புதுவருவாயையுடைய நல்ல வீடு. கூட்டு முதல் - தானியக் கூட்டின் அடியில் ; (புறநா.396 : 19) 7. இமைத்தோர் - இமைகொட்டுவோர். மாத்திரை - அளவு.ஞெரேரென - விரைவாக. 8. குணக்கு - கிழக்கு. கனை - செறிவு. 9. “மாலையன்னதோர் புன்மையுங் காலைக், கண்டோர் மருளும்வண்டுசூழ் நிலையும்” (பொருந. 96 - 7) . 10. பருஇழை -பரிய நூலிழை. 11. பறைந்த - தேய்ந்த ; புறநா. 359 ; 1. 9 - 11. “அரையது,வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர், ஓம்பி யுடுத்த வுயவற் பாண”, “கூதிர்ப் பருந்தி னிருஞ்சிறகன்ன, பாறிய சிதாரேன்” (புறநா. 69 : 2 - 4, 150 ; 1 - 2) ; ஈரும்பேனு மிருந்திறை கூடி, வேரொடு நனைந்து வேற்றிழைநுழைந்த, துன்னற் சிதாஅர்”, “பாசி வேரின் மாசொடுகுறைந்த, துன்னற் சிதாஅர்” (பொருந. 79 - 81, 153 - 4) 13. முரற்கை - தாளம் ; எங்களைப் பாடாதவாறு செய்தென்றபடி. 14. புறநா. 392 ; 16 ; “பாப்புக்கடுப்பன்ன தோப்பி” (அகநா. 348 : 7) ; “பாம்புவெகுண்டன்ன தேறல்” (சிறுபாண். 237) . சூடு - சூட்டிறைச்சி ; புறநா. 34, 369, 395, 397. 15. நிரயத்தன்ன வறன் - நரகவேதனை போன்ற துன்பத்தைச்செய்விக்கும் வறுமை. 17 - 8. “இலனென்னுமெவ்வ முரையாமை யீதல், குலனுடையான் கண்ணே யுள” (குறள், 223) என்பதையும் அதற்குப் பரிமேலழகர் எழுதிய விசேடவுரையையும்,விநாயக புராணம், அரசியற்கைப்படலம், 38 - ஆம் பாடல்முதலியவற்றையும் பார்க்க. நிரப்படுபுணை - வறுமையைக்கடத்தற்குரிய தெப்பம்.
|