20. நிறைக்குளப்புதவு - நீர்நிறைந்திருத்தலையுடைய குளத்தின்வாய்த்தலை ; புறநா.24 : 19. 21. இரவலர் வரையா - யாசகரை நீக்காத. வள்ளியோர் -வரையாது கொடுப்போர். கடைத்தலை - தலைவாயில். 22. ஞாங்கர் - பக்கம். நெடுமொழி - தனது மேம்பாட்டைக்கூறுமொழி. 18 - 23. இவ்வடிகளின் பொருள், "செருமானவேற்சென்னி தென்னுறந்தை யார்தம், பெருமான் முகம்பார்த்தபின்னர் - ஒருநாளும், பூதலத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாம்,காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்" (தண்டி. சூ. 21, உரை,மேற்.) என்னும் வெண்பாவை நினைப்பிக்கின்றது. மு. புறநா. 68 : 19, 148. (376) 377 | பனிபழுனியபல்யாமத்துப் பாறுதலை மயிர்நனைய இனிது துஞ்சுந் திருநகர்வரைப்பின் இனைய லகற்றவென் கிணைதொடாக்குறுகி | | 5 | அவியுணவினோர் புறங்காப்ப அறநெஞ்சத்தோன்வாழநாளென் றதற்கொண்டு வரலேத்திக் கரவில்லாக்கவிவண்கையான் வாழ்கவெனப் பெயர்பெற்றோர் | | 10 | பிறர்க்குவமந்தானல்லது தனக்குவமம் பிறரில்லென அதுநினைந்துமதிமழுகி ஆங்குநின்ற வெற்காணூஉச் சேய்நாட்டுச்செல்கிணைஞனை | | 15 | நீபுரவலையெமக்கென்ன மலைபயந்த மணியுங் கடறுபயந்தபொன்னும் கடல்பயந்த கதிர்முத்தமும் வேறுபட்ட வுடையுஞ்சேறுபட்ட தசும்பும் கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப | | 20 | நனவினல்கியோ னசைசா றோன்றல் நாடென மொழிவோரவனாடென மொழிவோர் வேந்தென மொழிவோரவன்வேந்தென மொழிவோர் ........................... பொற்கோட்டியானையர் |
|