பக்கம் எண் :

561

கவர்பரிக்கச்சைநன்மான்
25வடிமணி வாங்குருள
.....................நற்றேர்க்குழுவினர்
கதழிசை வன்கணினர்
வாளின் வாழ்நரார்வமொ டீண்டிக்
கடலொலி கொண்ட தானை
30அடல்வெங் குருசின்மன்னிய நெடிதே.

(பி - ம்.) 4 ‘தாடகுறுகி’ 6 ‘நெஞ்சத்தோனாளென்று’ 12 ‘பழகி’ 16 ‘மலைபெயர்ந்தபொன்னும்......பயந்தமணியும்’ 20 ‘னல்கியோனென்கை’ 22 ‘வேந்தன’

திணை - அது; துறை -வாழ்த்தியல்.

சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியைஉலோச்சனார்.

(கு - ரை.) 1.பழுனிய - முதிர்ந்த.

2. பாறுமயிர் -பரந்து மேல்நோக்கிய மயிர்.

1 - 2. "பாறுமயிரவியத், தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்" (புறநா. 374 : 3 - 4)

4.இனையல் - வருத்தல். கிணைதொடா - தடாரிப்பறையை வாசித்து.

5.அவியுணவினோர் - தேவர்; "அவியுணவி னான்றார்" (குறள், 413) .தேவர் புறங்காப்ப.

5 - 6. வாழும்படிநாடோறும் புறங்காப்பவென்று.

8.கவி வண்கையான் - கொடையாற் கவிந்த கையோடு.

9 - 10.பெற்றோராகிய பிறர்க்கு.

10 - 11. "பிறர்க்குநீ வாயினல்லது நினக்குப், பிறருவம மாகா வொருபெரு வேந்தே" (பதிற். 73 : 2 - 3) ,

‘பொருநனென்றது தான்பிறர்க்கு உவமிக்கப்படுவானென்னும் பொருட்டு’ (மதுரைக். 42, ந.)

12. அது -உவமமின்மையை. மழுகி : "நிறையுமதி யிரவுமழுகி நிலைகெடநகைத்து" (தக்க. 36)

13. எற்காணூஉ -என்னைக்கண்டு.

14. கிணைஞனை - கிணைஞனாகிய நீ; ஐ :முன்னிலையை விளக்கி நின்றது.

15. புரவலை -எம்மாற் பாதுகாத்தற்குரியாய். என்ன - என்று சொல்லி.

16. கடறு - காடு.

18.சேறுபட்ட தசும்பு - கட்குடம்.

19. "கனவெனமருண்டவென் னெஞ்சே மாப்ப" (பொருந. 98)

19 - 20. "கனவென மருளவல்லே நனவின், நல்கி யோனே நசைசா றோன்றல்" (புறநா.387 : 26 - 7)