23. பொன் - கிம்புரி; ஆகுபெயர். 24.கவர்பரி - பகுந்து விரையும் செலவு : "கவர்பரிப்புரவியர்" (சிலப். 5 : 159) . மான் - குதிரை. 27.கதழிசை - விரைதல் பொருந்திய. 28. வாளின்வாழ்நர் - வாள்வீரர். 30. மன்னியநெடிது - நெடுங்காலம் வாழ்வானாக. (377) 378 | தென்பரதவர்மிடல்சாய வடவடுகர் வாளோட்டிய தொடையமைகண்ணித் திருந்துவேற் றடக்கைக் கடுமா கடைஇயவிடுபரி வடிம்பின் | | 5 | நற்றார்க் கள்ளின்சோழன் கோயிற் புதுப்பிறை யன்ன சுதைசெய்மாடத்துப் பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென் அரிக்கூடு மாக்கிணை யிரியவொற்றி எஞ்சா மரபின் வஞ்சி பாட | | 10 | எமக்கென வகுத்தவல்ல மிகப்பல மேம்படு சிறப்பி னருங்கலவெறுக்கை தாங்காது பொழிதந் தோனே யதுகண் டிலம்பாடுழந்தவென் னிரும்பே ரொக்கல் விரற்செறிமரபின செவித்தொடக் குநரும் | | 15 | செவித்தொடர்மரபின விரற்செறிக் குநரும் அரைக்கமை மரபினமிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின வரைக்கியாக் குநரும் கடுந்தெற லிராமனுடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை | | 20 | நிலஞ்சேர்மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளையிழைப்பொலிந் தாஅங் கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே இருங்கிளைத் தலைமையெய்தி அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே. |
(பி - ம்.) 3 ‘தொடையமைக்கண்ணி’ 4 ‘குடைஇய’, ‘வடிம்பினறறைக்கிளளிசொழர்’ 10 ‘வகுதகுவல்ல’ 11 ‘னழுங்கலவெறுக்கை’ 15 ‘விரறசெறிகுநருஞ’ 16 ‘மனக்கமைமரபினமிடறு’ 18 ‘கடுந்தேர்’ 19 - 20 ‘ஞான்றுநிலஞ்’ 21 ‘மிழைப்பொலிந்’ 22 ‘வருநதை’ 23 ‘கிணைத்தலைமை’
|