திணை - அது; துறை - இயன்மொழி. சோழன் செருப்பாழியெறிந்த இளங்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் (பி - ம்.மொழி......திபசுங்குடையநர்) (கு - ரை.) 1.மிடல் - வலி. 2. வடுகர் -வடுகவீரர்; இவர் வடநாட்டினருள் ஒருவகையார்; "கடுங்குரற்பம்பைக் கதநாய் வடுகர்" (நற். 212 : 5) , "குல்லைக்கண்ணி வடுகர்" (குறுந். 11 : 5) , "கல்லா நீண்மொழிக்கதநாய் வடுகர்", "வானிணப் புகவின் வடுகர்", "முரண்மிகுவடுகர்", "தொடையமை பகழித் துவன்றுநிலைவடுகர்", "வம்ப வடுகர் பைந்தலை சவட்டி", "கதநாய் வடுகர்" (அகநா. 107 : 11, 213 : 8, 281 : 8, 295 : 15, 375 : 14, 381 : 7) .ஓட்டிய - ஓட்ட. 1 - 2. "பரதவர் -தென்றிசைக்கட் குறுநில மன்னர்; அது, ‘தென்பரதவர்...................வாளோட்டிய’என்னும் புறப்பாட்டானும் உணர்க" (மதுரைக். 144, ந.) 3.தொடை அமை கண்ணி - கட்டுதலமைந்த தலைமாலை. வேலுக்குமாலைசூட்டல் மரபு; புறநா. 332 : 1 - 5. 4. கடைஇய - செலுத்திய.வடிம்பு - இங்கே காலின் விளிம்பு; "மாவுடற்றியவடிம்பு" (பதிற். 70 : 2) 5. கோயில் -அரண்மனை. 6. சுதை - சுண்ணச்சாந்து; "வெள்ளிவெண்சுதை யிழுகிய மாடத்து" (மணி. 6 : 43) ; "திங்களுங்கரிதென வெண்மை தீட்டிய, சங்கவெண் சுதையுடைத் தவள மாளிகை" (கம்ப.நகரப். 133) ; "வெண்சுதைதீற்றிய மாடம்" (நைடதம், நகர. 5) 7.பனிக்கயம் - குளிர்ந்த நீரையுடைய குளம் ; நகருக்குக் குளம் உவமை ; "கயங்கண்டன்ன வயங்குடை நகரத்து" (மதுரைக். 484) ; "நிழற்கயத்தன்ன நீணகர்" (அகநா. 105 : 7) 8.அரிக்கூடுமாக்கிணை - அரித்தெழும் ஓசையையுடைய பெரியதடாரிப்பறை ; "அரிக்கூ டின்னியம்" (மதுரைக். 612) 9.வஞ்சி - பகைமேற் செலவு ; புறநா. 15 : 24, 33 : 10 11.அருங்கல வெறுக்கை - பெறுதற்கரிய ஆபரணமும் செல்வமும் ;புறநா. 146 : 1. 13.இலம்பாடு - இல்லாமை உண்டாதல்; ஒக்கல் - சுற்றம் ; "இலம்படு காலையாயினும், புலம்பல் போயின்று பூத்தவென் கடும்பே", "இரும்பேரொக்கல் பெரும்புலம் பகற்ற", "இரும்பே ரொக்கல் பெரும்புலம்புறினும்" (புறநா. 380 : 15 - 6, 390 : 19, 394 : 16) 14 - 5.விரலிற் செறித்தற்குரிய மோதிரமுதலியவற்றைக் காதிலும், காதிற்செறித்தற்குரிய குழை முதலியவற்றை விரலிலும் செறித்துக்கொண்டாரென்றபடி.
|