386 | நெடுநீர நிறைகயத்துப் படுமாரித் துளிபோல நெய்துள்ளிய வறைமுகக்கவும் சூடு கிழித்து வாடூன் மிசையவும் | 5 | ஊன்கொண்ட வெண்மண்டை ஆன்பயத்தான் முற்றழிப்பவும் வெய்துண்ட வியர்ப்பல்லது செய்தொழிலான் வியர்ப்பறியாமை ஈத்தோ னெந்தை யிசைதன தாக | 10 | வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் பாத்திப் பன்மலர்ப் பூத்த தும்பின புறவே, புல்லருந்து பல்லாயத்தான் வில்லிருந்த வெங்குறும்பின்று கடலே, காறந்த கலனெண்ணுவோர் | 15 | கானற் புன்னைச் சினைநிலைக் குந்து கழியே, சிறுவெள் ளுப்பின் கொள்ளை சாற்றிப் பெருங்கனன்னாட் டுமணொலிக்குந்து அன்னநன் னாட்டுப் பொருநம் யாமே பொராஅப் பொருநரேம் | 20 | குணதிசை நின்று குடமுதற் செலினும் குடதிசை நின்று குணமுதற் செலினும் வடதிசை நின்று தென்வயிற் செலினும் தென்றிசை நின்று குறுகாது நீடினும் யாண்டு நிற்க வெள்ளியாம் | 25 | வேண்டிய துணர்ந்தோன் றாள்வா ழியவே. |
(பி - ம்.) 1 ‘நிறையககயத்துப’ 10 ‘நெலலி வேயி னீடிய’ 11. ‘பூத்ததுமபினனுறவேபுலலருந்து’ 15 ‘நிலககுந்து 16 ‘கொளளைச் சாறறி’ 17 ‘பெருங்கனனாட்டு’ 20 - 21 ‘குடதிசை...செலினும் வடதிசை’ 24 ‘நிறகவெனறியாம். திணையும் துறையும் அவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர்கிழார். (கு - ரை.) 1. கயம் - பள்ளமான நீர்நிலை. 3 வறை - வறையல் ; ஒருவகை உணவு. முகக்க -முகந்துகொள்ள.
|