பக்கம் எண் :

575

386

நெடுநீர நிறைகயத்துப்
படுமாரித் துளிபோல
நெய்துள்ளிய வறைமுகக்கவும்
சூடு கிழித்து வாடூன் மிசையவும்
5ஊன்கொண்ட வெண்மண்டை
ஆன்பயத்தான் முற்றழிப்பவும்
வெய்துண்ட வியர்ப்பல்லது
செய்தொழிலான் வியர்ப்பறியாமை
ஈத்தோ னெந்தை யிசைதன தாக
10வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்திப் பன்மலர்ப் பூத்த தும்பின
புறவே, புல்லருந்து பல்லாயத்தான்
வில்லிருந்த வெங்குறும்பின்று
கடலே, காறந்த கலனெண்ணுவோர்
15கானற் புன்னைச் சினைநிலைக் குந்து
கழியே, சிறுவெள் ளுப்பின் கொள்ளை சாற்றிப்
பெருங்கனன்னாட் டுமணொலிக்குந்து
அன்னநன் னாட்டுப் பொருநம் யாமே
பொராஅப் பொருநரேம்
20குணதிசை நின்று குடமுதற் செலினும்
குடதிசை நின்று குணமுதற் செலினும்
வடதிசை நின்று தென்வயிற் செலினும்
தென்றிசை நின்று குறுகாது நீடினும்
யாண்டு நிற்க வெள்ளியாம்
25வேண்டிய துணர்ந்தோன் றாள்வா ழியவே.

(பி - ம்.) 1 ‘நிறையககயத்துப’ 10 ‘நெலலி வேயி னீடிய’ 11. ‘பூத்ததுமபினனுறவேபுலலருந்து’ 15 ‘நிலககுந்து 16 ‘கொளளைச் சாறறி’ 17 ‘பெருங்கனனாட்டு’ 20 - 21 ‘குடதிசை...செலினும் வடதிசை’ 24 ‘நிறகவெனறியாம்.

திணையும் துறையும் அவை.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர்கிழார்.

(கு - ரை.) 1. கயம் - பள்ளமான நீர்நிலை.

3 வறை - வறையல் ; ஒருவகை உணவு. முகக்க -முகந்துகொள்ள.