1 - 3. சுட்ட நெய்யில் வேகும் வறையின்முழக்கத்திற்குக் கயத்தில் வீழும் மாரித்துளியின்முழக்கம் உவமம் ; சீவக. 2971 4. சூடு -சுடப்பட்ட இறைச்சி. 5. புறநா. 384: 8 - 9. 6.ஆன்பயம் - பசுப்பால். 7. உண்டமையாலுண்டானவேர்வையல்லாமல். 8. அறியாதபடி. 10 - 11. கரும்பின்பாத்தி : “கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல்” (ஐங்குறு. 65) 11. ததும்பின -நிறைந்தன. 12. புறவு - முல்லைநிலம்.ஆயத்தான் - ஆயத்தோடு கூடி. 13. குறும்பு -சிற்றரண்கள். 14. கால் தந்த -காற்றாற்கொண்டுவரப்பட்ட. 15. சினை - கிளை.நிலைக்குந்து - நிலைக்கும். 17. உமண் - உப்புவிற்குஞ்சாதி. 16 - 7. “சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப், பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி” (பெரும்பாண். 64 - 5) 19.பொராப் பொருநர் - கூத்தர் ; வெளிப்படை ; பொராஅ -ஒப் பில்லாதவெனினுமாம். 20. செலினும் - சுக்கிரன்சென்றாலும். 24. வெள்ளி - சுக்கிரன். 25வேண்டியது - யாம்வேண்டியதை. (386) 387 | வள்ளுகிர வயலாமை வெள்ளகடு கண்டன்ன வீங்குவிசிப் புதுப்போர்வைத் தெண்கண் மாக்கிணை யியக்கி யென்றும் | 5 | மாறுகொண்டோர் மதிலிடறி நீறாடிய நறுங்கவுள பூம்பொறிப் பணையெருத்தின வேறுவேறு பரந்தியங்கி வேந்துடைமிளை யயல்பரக்கும் | 10 | ஏந்துகோட் டிரும்பிணர்த்தடக்கைத் திருந்துதொழிற் பலபகடு பகைப்புல மன்னர் பணிதிறை தந்துநின் நகைப்புல வாணர் நல்குர வகற்றி மிகப்பொலியர்தன் சேவடியத்தையென் | 15 | றியானிசைப்பினனிநன்றெனாப் |
|