| பலபிற வாழ்த்த விருந்தோரென்கோ....... மருவவினக ரகன் திருந்துகழற்சேவடி குறுகல் வேண்டி வென்றிரங்கும் விறன்முரசினோன் | 20 | என்சிறுமையி னிழித்துநோக்கான் தன்பெருமையின் றகவுநோக்கிக் குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ மன்றுநிறையு நிரையென்கோ | 25 | மனைக்களமரொடு களமென்கோ ஆங்கவை, கனவென மருள வல்லே நனவின் நல்கி யோனே நசைசா றோன்றல் ஊழி வாழி பூழியர் பெருமகன் பிணர்மருப் பியானைச் செருமிகு நோன்றாட் | 30 | செல்வக் கடுங்கோ வாழி யாதன் ஒன்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவன் விடுவர் மாதோ நெடிதே நி......... புல்லிலை வஞ்சிப் புறமதி லலைக்கும் கல்லென் பொருநை மணலினு மாங்கட் | 35 | பல்லூர் சுற்றிய கழனி எல்லாம் விளையு நெல்லினும் பலவே. |
(பி - ம்.) 2 ‘வௌககொணடனன’ 4 ‘தென்கண்’ 8 ‘பாநதியயங்கி’ 9 ‘வேந்துடையிளை’ 13 - 6 நகைபபல வாழ்நர் - மிபபொலி யாத செவடி பொலியாததையென்றனியானிசப பினனினனனிநனறனிற பலபிறன்’ 16 ‘ரெலகோ’ 17 ‘மிருவ’ 19 - 20 ‘வெனறிரககு முரசி னானெனச சிலமபினிழித்து’ 20 ‘எனசசிறுமை’ 22 ‘குனறகழகளிறு’ 25 ‘மகனைககளமரொடு கலமென’ 27 ‘நலகியோனெநதை நகைசான றோன்றல்’ 31 ‘என்னாத்தெவ்வர்’,‘பணிததிவணிவிடுவா’ 34 ‘மணலினுமாக்கட்’ திணையும் துறையும் அவை. சேரமான்சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோவாழியாதனைக் குண்டுகட்பாலியாதன். (கு - ரை.) 1. வள் - கூர்மை ; “வள்ளணி வளைநாஞ்சிலவை” (பரி. 15 : 57) 2. அகடு -வயிறு. 1 - 4. கிணைப்பறை ஆமையின் அகடுபோல்வது ; “ஆமை, கம்புளியவ னாக விசிபிணித், தெண்கட் கிணையிற் பிறழும்” (அகநா. 356 : 2 - 4) ; பு. வெ. 186, 306.
|