| துதைந்ததூவியம் புதாஅஞ் சேக்கும் ததைந்த புனனின்செழுநகர் வரைப்பின் நெஞ்சமர் காத னின்வெய் யோளொ டின்றுயி..........ஞ்சொல் | | 20 | துளிபத னறிந்து பொழிய வேலி யாயிரம் விளைகநின் வயலே. | (பி - ம்.) 2 ‘விணடெறபயயிறஙகன’ 3 ‘நெலலினகீழவர்’ 9 ‘பண்பின’ 15 ’துழைமீன’ 17 ’தநதைதநத புனயானின செழுந காவனபபின்’ 18 ‘காதனீவெயயொடு’ திணை - அது; துறை - கடைநிலை. பொறையாற்று கிழானைக் கல்லாடனார் (பி - ம். காலலனார்) (கு - ரை.) 2. விண்டு - திருமால். பிறங்கல் - மலை ; இங்கே தானியப்போர். 3. முகடு - உச்சி. 2 - 3. “விண்டு வனைய வெண்ணெற் போர்வின்” (ஐங்குறு. 58) 4. பகடுதருபெருவளம் - எருது முதலியவைகள் உழுதுண்டாக்கிய பல பண்டம். 5. கெண்டி - கிண்டி. 6. அரியல் - கள். 7. பசித்தென - பசித்ததாக. 8. இரும்பேரொக்கல் - வறுமையாற்கரிந்த பெரிய சுற்றங்கள். 9. பண்பில - பண்பில்லாதன. 11. மருங்கு - சுற்றம். 12. ஆதலின் இவன் அளியன். 12 - 3. முருகு. 282 - 5. 15. நுழைமீன் - ஒருவகைமீன் ; நுழைந்துசெல்லுகின்ற மீனுமாம். 16. புதா - ஒருவகைநாரை ; இப்பெயர் போதாவெனவும் வழங்கும் ; “உள்ளு மூரலும் புள்ளும் புதாவும்” (சிலப். 10 : 117) 18. நின்வெய்யோளொடு - நின்னால்விரும்பப்பட்ட மனைவியோடு. 20. பதனறிந்து - காலமறிந்து. 21. ஆயிரம்விளைக - ஆயிரக்கலம் விளைக ; “வேலி, யாயிரம் விளையுட் டாகக், காவிரி புரக்கு நாடு” (பொருந. 246 - 8) (391) 392 | மதியேர் வெண்குடை யதியர் கோமான் கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான் பசலை நிலவின் பனிபடு விடியற் பொருகளிற் றடிவழி யன்ன வென்கை | | 5 | ஒருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ உருகெழு மன்ன ராரெயில் கடந்து நிணம்படு குருதிப் பெரும்பாட்டீரத் |
|