பக்கம் எண் :

583

7. சிலம்ப - முழங்க ; முழக்கம் : இங்கே எதிரொலி.

10. சென்றஞான்று - முதல்நாள்.

12. அளியன் - அளிக்கத்தக்கான்.

14. “ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி, வேர்புரை சிதாஅர் நீக்கி” (புறநா. 392 : 13 - 4) ; “பாசி வேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதாஅர் நீக்கி” (பொருந. 153 - 4) ; “பாசி யன்ன சிதர்வை நீக்கி” (பெரும்பாண். 468)

15. மலரென்றது பகன்றைப்பூவை ; புறநா. 393 : 17 - 8, குறிப்புரை.

17. துவை - துவையல்.

18. வெள்ளிக்கலம் : பெரும்பாண்.477 - 80, ந.

19. முன்னூர் - ஊர்முன். பொதியில் - அம்பலம்.

20. “இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்” (புறநா. 394 ; 16)

21. அகடுநனை - உள்ளிடம் நனைந்த. வேங்கைவீ - வேங்கை மரத்துப்பூ.

22. பகடுதரு செந்நெல் - எருது முதலியவைகள் உழுதுண்டாக்கிய செவ்விய நெல் ; “பகடுதருபெருவளம் வாழ்த்தி” (புறநா. 391 ; 4) ; “பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க” (நாலடி. 2)

21 - 2. மலைபடு. 434 - 5.

23. கொண்டி - பொருளின் மிகுதி ; புறநா. 382 : 1.

27. வான் - மேகம்.

(390)

391

தண்டுளி பல பொழிந் தெழிலி யிசைக்கும்
விண்டு வனைய விண்டோய் பிறங்கல்
முகடுற வுயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
5திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி
அரிய லார்கைய ருண்டினி துவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
ஈங்குவந் திறுத்தவென் னிரும்பே ரொக்கல்
தீர்கை விடுக்கும் பண்பில முதுகுடி
10நன.........வினவலின்
முன்னும் வந்தோன் மருங்கில னின்னும்
அளிய னாகலிற் பொருந னிவனென
நின்னுணர்ந் தறியுந ரென்னுணர்ந்து கூறக்
காண்கு வந்திசிற் பெரும...................
15.......................பெருங்கழி நுழைமீ னருந்தும்