| வந்ததற்கொண்டு நெடுங்கடை நின்ற புன்றலைப் பொருநனளியன் றானெனத் தன்னுழைக் குறுகல் வேண்டியென்னரை முதுநீர்ப் பாசி யன்ன வுடைகளைந்து | | 15 | திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும் அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில் வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி முன்னூர்ப் பொதியிற் சேர்ந்த மென்னடை | | 20 | இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற அகடுநனை வேங்கை வீகண் டன்ன பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக் கொண்டி பெறுகென் றோனே யுண்டுறை மலையல ரணியுந் தலைநீர் நாடன் | | 25 | கண்டாற் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி ........................................................ வானறி யலவென் பாடுபசி போக்கல் அண்ணல் யானை வேந்தர் உண்மையோ வறியல் காண்பறி யலரே. |
(பி - ம்.) 2 ‘தாயிவிளா’ 3 ‘செநதிநெடுநகாமலாகமழு’ 6 ‘தாவலர்’ 7 ‘மழைககளத’ 8 ‘பனனாளறையும்’ 14 ‘வுடைகளைநததிரும வானனன’ 17 ‘அமிரதானமரபின’ 20 ‘பொருமபுகறறத்தடுஙகண் வேங்கை’ 21 ‘தகடுகனை வேங்கை’ 22 ‘படுதருசெநநெற்’ 25 ‘கணடாராககொணடுமவனறிருநதடி’ திணையும் துறையும் அவை. அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார். (கு - ரை.) 1. அறவைநெஞ்சம் - அறத்தையுடைய நெஞ்சம் ; “அறவை யாய ரகன்றெரு வடைந்தன” (சிலப். 22 : 116) ; ‘அறவை நெஞ்சத்தாயர்’ என்பதை, “ஆகாத் தோம்பி யாப்பய னளிக்கும், கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை” (சிலப்.15 : 120 - 21) என்பது விளக்குகின்றது. 1 - 2. புறநா. 44 : 11 - 3. செருந்தி - ஒரு பூமரம். 5. ஆர்வலர் - பரிசிலர். காவலர் - அரசர். 6. கடி - காவல். 5 - 6. “புலிதுஞ்சு வியன்புலத் தற்றே, வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே” (புறநா. 54 : 13 - 4)
|