பக்கம் எண் :

100

    

விளங்கிய சுடரையுடைய ஞாயிறு  நான்கு  திக்கினும் தோன்றினும்;
இலங்கு  கதிர்  வெள்ளி தென்   புலம்   படரினும் - விளங்கிய
கதிரையுடைய வெள்ளிமீன் தென்றிசைக்கட் செல்லினும்; அந் தண்
காவிரி வந்து கவர்பு ஊட்ட - அழகிய குளிர்ந்த காவிரி வந்து பல
காலாய் ஓடி ஊட்ட; தோடு  கொள்  வேலின்  தோற்றம்  போல -
தொகுதி  கொண்ட  வேலினது  காட்சியை  யொப்ப;  ஆடு  கண்
கரும்பின் வெண்  பூ  நுடங்கும் -  அசைந்த  கண்ணினையுடைய
கரும்பினது வெளிய பூ அசையும்;  நாடெனப்  படுவது  நினதே -
நாடென்று   சொல்லப்படுவது  நின்னுடைய  நாடே;  நாடு  கெழு
செல்வத்துப்  பீடு  கெழு  வேந்தே -  அந்  நாடு  பொருந்திய
செல்வத்தையுடைய பெருமை பொருந்திய வேந்தே; நினவ கூறுவல் -
நின்னுடையன சில  காரியஞ்  சொல்லுவேன்;  எனவ  கேண்மதி -
என்னுடையன சில வார்த்தையைக் கேட்பாயாக; அறம் புரிந்தன்ன
செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதின் - அறக் கடவுள்
மேவி    ஆராய்ந்தாற்    போன்ற    செங்கோலா   னாராயும்
ஆராய்ச்சியையுடைய நீதியைக் கேட்கவேண்டுங் காலத்து; பதன்
எளியோர் - செவ்வி யெளியோர்; ஈண்டு உறை வேண்டுபொழுதில்
பெயல் பெற்றோர் - இவ்விடத்துத் துளிவேண்டுங் காலத்து மழை
பெற்றவரே; ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ - ஞாயிற்றைத்
தன்மேற் கொண்ட பக்கந் திரண்ட முகில்! மாக விசும்பின் நடுவு
நின் றாங்கு - மாகமாகிய உயர்ந்த வானத்தினது நடுவு நின்று அதன்
வெயிலை  மறைத்தாற்    போல;   கண்    பொர   விளங்கும் -
கண்ணொளியோடு மாறுபட விளங்குகின்ற; நின் விண் பொரு வியன்
குடை - நினது வானை முட்டிய பரந்த வெண்கொற்றக் குடை;
வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே - வெயிலை மறைத்தற்குக்
கொண்டதோ  வெனின்  அன்று;   வருந்திய   குடி   மறைப்பது -
வருத்தமுற்ற குடியை நிழல் செய்தல் காரணத்தாற் கொள்ளப்பட்டது;
கூர் வேல்  வளவ - கூரிய  வேலினையுடைய  வளவ;  வெளிற்றுப்
பனந்துணியின் - இளைய பனையினது துண்டம் போல; வீற்று வீற்றுக்
கிடப்ப - வேறு வேறு கிடப்ப; களிற்றுக் கணம் பொருத கண்ணகன்
பறந்தலை   -   களிற்றுத்   திரளைப்    பொருத    இடமகன்ற
போர்க்களத்தின்கண்; வரு படை தாங்கிப் பெயர்  புறத் தார்த்து -
வருகின்ற படையை யெதிர்நின்று பொறுத்து அது  சரிந்து  மீளும்
புறக்கொடை  கண்டு  ஆர்த்துக்கொண்டு;  பொருபடை  தரூஉம்
கொற்றமும் - நின் போர் செய்யும் படை தரும் வெற்றியும்; உழு
படை யூன்று சால் மருங்கின் ஈன்ற தன் பயன் - உழுகின்ற கலப்பை
நிலத்தின் கண்ணே ஊன்று சாலிடத்து விளைந்த நெல்லினது பயன்;
மாரி பொய்ப்பினும் - மழை