பக்கம் எண் :

103

     உரை: அடுநை யாயினும் - கொல்வா யாயினும்; விடுநை
யாயினும் -கொல்லா  தொழிவாயாயினும்;  நின்  புரைமை -
அவற்றால் நினக்கு வரும் உயர்ச்சி யாம் சொல்ல வேண்டா; நீ
அளந்தறிதி - நீயே எண்ணி யறிவை; செறி யரிச் சிலம்பின் -
செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும்; வார் கோல்
குறுந் தொடி மகளிர்- நீண்ட கோற்றொழிலாற் செய்யப்பட்ட குறிய
வளையினைமுடைய மகளிர்; பொலஞ் செய் கழங்கின் தெற்றி யாடும்
- பொன்னாற் செய்யப்பட்ட கழலான் வேதிகை போல வுயர்ந்த
எக்கர்க்கண்ணே யிருந்து விளையாடும் அணுமையையுடைய;
தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய - குளிர்ந்த ஆன்
பொருந்தத்தினது வெளிய மணல் சிதற; கருங்கைக் கொல்லன்
அரஞ்செய் அவ்வாய் நெடுங்கைநவியம் பாய்தலின் - வலிய
கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட அழகிய
வாயினை யுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி
வெட்டுதலான்; நிலை யழிந்து வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப -
நின்ற நிலை கலங்கி வீழும் பூ நாறுகின்ற நெடிய கொம்புகள்
தனிப்ப; காவிதொறும் கடி மரம் தடியும் ஓசை - காக்கடோறும்
காவன் மரங்களை வெட்டும் ஓசை; தன்னூர் நெடு மதில் வரைப்பின்
கடி மனை இயம்ப - தன்னுடைய ஊரின்கண்ணே நெடிய மதி
லெல்லையில் தனது காவலையுடைய கோவிற்கண்ணே
சென்றொலிப்ப; ஆங்கு இனிதிருந்த வேந்தனோடு - அவ்விடத்து
மானமின்றி இனிதாக இருந்த வேந்தனுடன்; ஈங்கு - இவ்விடத்து;
நின்சிலைத்தார் முரசம் கறங்க - நினது இந்திர விற்போலும்
மாலையையுடைய முரசொலிப்ப; மலைத் தனை என்பது நாணுத்தக
வுடைத்து - பொருதா யென்பது கேட்டார்க்கு நாணும் தகுதியை
யுடைத்து, ஆதலால அப்போரை ஒழியத்தகும் எ-று.

     வார்கோற் குறுந்தொடி யென மாறி யுரைக்கப்பட்டது. இனி திருந்த
வென்றது குறிப்பு மொழி.

     கடி மரந் தடியு மோசை தன் மனை இயம்ப இனிதிருந்த வேந்தனொடு
மலைத்தனை யென்பது நாணுத்தகவுடைத்து; அதனால் அடுநையாயினும்
விடுநையாயினும் நின் புரைமை நீ யளந் தறிதி யென மாறிக் கூட்டி வினை
முடிவு செய்க.

     மகளிர் தெற்றி யாடும் பொருநை யென்ற கருத்து; இங்ஙனம் இனி
மகளிர் கழங்காடும் அணுமையதாயினும் புறப்பட்டுப் போர் செய்யாத அவன்
வலியின்மை தோற்றி நின்றது. தெற்றி யாடும் தன்னூ ரென இயைப்பினும்
அமையும்.

     மேற்சென்றோனைச் சந்து செய்து மீட்டலின் இது துணை
வஞ்சியாயிற்று.

     விளக்கம்: தெற்றிபோ லுயர்ந்த எக்கர் மணலைத் தெற்றி யென்றது
ஆகுபெயர். “புரை யுயர் பாகும்” (தொல்.உரி:4) என்பதனால், புரைமை