| ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போலச் சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர் | 10. | மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன் | | உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத் தணிபறை யறையு மணிகொ டேர்வழிக் | 15. | கடுங்கட் பருகுநர் நடுங்குகை யுகுத்த | | நறுஞ்சே றாடிய வறுந்தலை யானை நெடுநகர் வரைப்பிற் படுமுழா வோர்க்கும் உறந்தை யோனே குருசில் பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே. (68) |
திணை: அது. துறை: பாணாற்றுப்படை. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது.
உரை: உடும்பு உரித்தன்ன என்பெழு மருங்கிற் கடும்பின் - உடும்புரித்தாற்போன்ற எலும்பெழுந்த விலாப்புடையை யுடைய சுற்றத்து; கடும் பசி களையுநர்க் காணாது - மிக்க பசியைத் தீரப்பாரைக் காணாதே; சில் செவித்தாகிய கேள்வி நொந்து நொந்து - கேட்டார் பலரும் அறிதற் கரிதாய் அறிவார் சிலராதலின் சில் செவிக்கண்ணதாகிய யாழை இப்பாண் சாதியது உணவிற்கு முதலாகப்பெற்ற பரிசு என்னென்று வெறுத்து; ஈண்டு எவன் செய்தியோ - பாண இங்கே என் செய்கின்றாயோ பாண; பூண் சுமந்து - பூணைத் தாங்கி; அம் பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து - அழகிய பெருமையையுடைய எழில் பெற்ற செம்பொறி பொருந்திய மார்பினையுடைய; மென்மையின் மகளிர்க்கு வணங்கி -மென்மையான மகளிர்க்குத் தாழ்ந்து; வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் - வன்மையான் வீரரை யகப்படுக்கும்; பீடு கெழு நெடுந்தகை - பெருமை பொருந்திய நெடுந்தகை; புனிறு தீர் குழவிக் கிலிற்று முலை போல - ஈன்றணிமை பொருந்தி அது தீர்ந்த குழவிக்குச் சுரக்கும் முலைபோல; சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர் - நீர் மிக்க காவிரியினது கரை மரத்தைச் சாய்க்கும் மிக்க வெள்ளம்; மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன் - உலகத்து உயிர்ப்பன்மையைப் பாதுகாக்கும் நல்ல சோழநாட்டையுடைய வேந்தன்; உட்பகை ஒரு திறம் பட்டென - உட்பகை யொரு கூற்றிலே பட்டதென்னும்படி; புட்பகைக்கு ஏவானாகலின் - எம்மைப் புட்செய்யும் பகையிடத்து |