வாயிலாகப் பெருவிருந்து செய்தான். அதற்கு ஆசிரியர் ஆவூர் மூலங்கிழாரும் சென்றிருந்தார். அவ் வேள்வியில் இவனுடைய மனைவியர் தமக்குரிய ஏவல் கேட்டு நிற்ப, நெய்யை நீரைப்போல் வழங்கி வேள்வி செய்ததும் விருந்து செய்ததும் கண்டு வியந்த ஆவூர் மூலங்கிழார், இப்பாட்டின்கண், இவற்றையெல்லாம் பொருளாக நிறுத்திப் பாடி முடிவில், நீ இப்போது தந்த பரிசிலைக்கொண்டு காவிரிக் கரையில் உள்ள எம்முடைய ஆவூர் மூலத்தில் நின் புகழ் பாடி உண்டும் தின்றும் ஊர்ந்தும் மகிழ்ந்தாடுவோம்; நீ இமயம்போல இந் நிலமிசை நிலைபெறுவாயாகஎன வாழ்த்துகின்றார்.
| நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த வீரிரண்டின் ஆறுணர்ந்த வொருமுதுநூல் | 5 | இகல்கண்டோர் மிகல்சாய்மார் | | மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ் துறையு முட்டின்று போகிய உரைசால் சிறப்பி னுரவோர் மருக | 10 | வினைக்குவேண்டி நீபூண்ட | | புலப்புல்வாய்க் கலைப்பச்சை சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய மறங்கடிந்த வருங்கற்பின் அறம்புகழ்ந்த வலைசூடிச் | 15 | சிறு நுதற்பே ரகலல்குற் | | சிலசொல்லிற் * பலகூந்தலின் நிலைக்கொத்தநின் றுணைத்துணைவியர் தமக்கமைந்த தொழில்கேட்பக் காடென்றா நாடென்றாங் | 20 | கீரேழி னிடமுட்டாது | | நீர்நாண நெய்வழங்கியும் எண்ணாணப் பலவேட்டும் மண்ணாணப் புகழ்பரப்பியும் |
* மகளிர் சில சொற்களை யுடையராதல் நல்லிலக்கண மென்பது பண்டைத் தமிழ் மரபு. இவர்களோடு அந்நாளில் தொடர்பு கொண்டிருந்தயவனரும் இக் கொள்கையினையுடையர். தெமோகிரிடெஸ் (Democritus) என்பவர், Fewness of words is an ornament to a Woman (274) என்று கூறுவது காண்க. |