| | முலைக்கோண் மறந்த புதல்வனொடு மனைத்தொலைந் திருந்தவென் வாணுதற் படர்ந்தே. |
திணையும் துறையு மவை. அவனையவர் பாடியது.
உரை: அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு - அஞ்சத் தக்க முறைமையுடைய வெய்ய சினத்தையுடைய மழையின்கண் உள்ள இடியேறு அணங்குடை யரவின் அருந்தலை துமிய - அச்சமுடைய பாம்பினது அணுகுதற்கரிய தலை துணிய; நின்று காண்பன்னை நீள்மலை மிளிர - நிலவகலத்தை நின்று பார்ப்பதுபோன்ற நீண்டமலை பிறழ;குன்று தூவெறியும் அரவம்போல - சிறுமலை தூவஎறியும் ஒசைபோல; முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று - வீரமுரசு கிளர்ந்தொலிக்கும் படையுடனே மேற்சென்று;அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல் - வேந்தர்பட எதிர் நின்று கொல்லும் புகழமைந்த தலைவ; வள்ளியை யாதலின் - நீ வள்ளியை யாதலான்; வணங்குவன் இவன் என - எமக்குத் தாழ்ந்து பரிசில் நல்குவன் இவன் என்று; நின் உள்ளி வந்த- நின்னை நினைந்து வந்த; ஓங்கு நிலைப் பரிசிலென்- உயர்ந்த நிலைமையயுடைய பரிசிலேனாகிய யான்; கொள்ளா மாந்தர் கொடுமை கூற -நினக்கு எம்மை எதிரேற்றுக் கொள்ளாத மாந்தரது கொடுமையைச் சொல்லவும்;நின் உள்ளியது முடித்தோய் மன்ற-நின்னுடைய நினைவே செய்தாய் நிச்சயமாக; முன்னாள் கையுள்ளது போல் காட்டி - முன்னைநாள் பரிசில் கையிலே புகுந்ததுபோலக் காட்டி; வழிநாள் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் - பிற்றைநாள் பொய்யைப் பெற்று நின்ற நினது புறநிலைமைக்குயான் வருந்திய வருத்தத்திற்கு;நாணாயாயினும் - நீ தான் நாணாய் ஆயினும்; நாணக் கூறி - நீ நாணச்சொல்லி; என் நுணங்கு செந்நா-எனது நுண்ணிய ஆராய்ச்சியையுடைய செவ்விய நா; அணங்க ஏத்தி வருந்தப் புகழ்ந்து;பாடப்பாடப் பாடுபுகழ் கொண்ட -நாடோறும் பாடப்பாடப் பின்னரும் பாடவேண்டும் புகழை யேற்றுக்கொண்ட;நின் ஆடு கொள் வியன் மார்பு - நினது வென்றி பொருந்திய அகன்ற மார்பை;தொழுதனென் பழிச்சிச் செல்வல் யான் - வணங்கி வாழ்த்திப் போவேன் யான், வைகலும் வல்சி இன்மையின் - நாடோறும் உணவில்லாமை யான்; வயின் வயின் மாறி - இடந்தோறம் இடந்தோறும் மாறி மாறி அகழ்தலால்;இல்லெலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் - இல்லெலி மடிந்த பழைய சுவராகிய எல்லையையுடைய; பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து - பாலில்லாமையாற் பலபடி சுவைத்து; முலைக்கோள் மறந்தபுதல்வனொடு - முலையுண்டலை வெறுத்த பிள்ளையுடனே; மனைத்தொலைந்திருந்த - மனையின் கண்ணே |