பக்கம் எண் :

பக்கம் எண் :304

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை

மகன் மடிந்ததற்குச் சிறிதும் வருந்துதலின்றிச் சோழிக வேனாதியை நோக்கி, ''உதயகுமரனுக்கு யான் செய்யவேண்டிய தண்டனையைத் தான் செய்தமையால் விஞ்சையன் தகவில னாவன்.

''மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவ லின்றெனின் இன்றால் ;''

''தன்மகனைப்புவியிலே கிடத்தி அவன்மீது தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த மன்னர்பிரான் வழியில் ஒரு தீவினையாளன் பிறந்தான் என்னுஞ் சொல் ஏனை யரசர்களின் செவியில் உறுவதற்கு முன்னம் அவனைப் புறங்கா டடைவித்துக் கணிகைமகளாகிய மணிமேகலையையும் சிறைப்படுத்துக'' என்றனன் ; சோழிக வேனாதி அவ்வாறு செய்தான். (இதன்கண் மருதி வரலாறும் விசாகையின் வரலாறும் மகளிர்க்குச் சிறந்த ஒழுக்கங்களை அறிவுறுத்துவன ; பின்னது கற்பதற்கு மிக்க சுவை பயப்பதுமாகும் மருதியென்பாளுக்குச் சதுக்கப் பூதம் கூறும் வாயிலாக, ''தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப், பொய்யில் புலவன் பொருளூரை தேறாய்'' எனத் திருவள்ளுவரும், திருக்குறளும் பாராட்டப்படுதல் அறிந்து மகிழற்குரியது.)]





5





10





15
கடவுள் மண்டிலங் காரிருள் சீப்ப
நெடுநிலைக் கந்தில் நின்ற பாவையொடு
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
உதய குமரற் குற்றதை யுரைப்பச்
சாதுயர் கேட்டுச் சக்கர வாளத்து

மாதவ ரெல்லாம் மணிமே கலைதனை
இளங்கொடி யறிவது முண்டோ விதுவெனத்
துளங்கா தாங்கவ ளுற்றதை யுரைத்தலும்
ஆங்கவள் தன்னை யாருயிர் நீங்கிய
வேந்தன் சிறுவனொடு வேறிடத் தொளித்து

மாபெருங் கோயில் வாயிலுக் கிசைத்துக்
கோயில் மன்னனைக் குறுகினர் சென்றீங்
குயர்ந்தோங் குச்சி உவாமதி போல
நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிகற்செய
வேலுங் கோலும் அருட்கண் விழிக்க

தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி
நினக்கென வரைந்த ஆண்டுக ளெல்லாம்
மனக்கினி தாக வாழிய வேந்தே!
இன்றே யல்ல இப்பதி மருங்கில்.