பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 9
9


(3) வினைக்காலங்களின் நால்வேறுபாடு.

எ-டு :  நிகழ்காலம் :  
 
வருகிறான் - தனிப்பு (Indefinite)
வந்து கொண்டிருக்கிறான் - தொடர்ச்சி (Continuous)
வந்திருக்கிறான் - நிறைவு (Perfect)
வந்துகொண்டிருந்திருக்கிறான்-நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous) .

கால்டுவெல் ஐயரின் சறுக்கல்கள்

கால்டுவெல் ஐயர்தலைசிறந்த திரவிட மொழியாராய்ச்சி சொல்லாராய்ச்சி வல்லுநரேனும், தொல்காப்பியப் பயிற்சியும் சங்கநூற் கல்வியும் மொழியாராய்ச்சியும் அக் காலத்தின்மையாலும், எல்லாத் துறையிலும் ஆரியத் தலைமை எதிர்ப்பின்றி யிருந்துவந்ததினாலும் தமிழின் தனித் தன்மையை யன்றித் தாய்மையையும் தலைமையையும் உணராது இலக்கண முள்ளிட்ட உயர்தரக் கலைநூல்கள் ஆரிய வழியினவென்றும், ஆன்மா பாவம் முதலிய பல கருத்துகளை யுணர்த்தத் தமிழிற் சொல்லில்லை யென்றும் தமிழ்ப் பெயர்வேற்றுமை வகுப்பு சமற்கிருதத்தைப் பின்பற்றிய தென்றும் தமிழர் அல்லது திரவிடர்பொதுவாய்த் தாழ்ந்த நாகரிக நிலையினர்என்றும் கூறிப்போந்தார். இனி, திரவிட மொழிகளிற் செயப்பாட்டு வினையில்லையென்றதும், ஆரிய முறையை அவர்அளவையாகக் கொண்டதைக் காட்டும்.

தமிழின் பொது வியல்பு

தமிழ் உலக முதற்றாய் மொழியாதலால், சீன மொழியின் அசை நிலைத் தன்மையையும், ஆரிய மொழிகளின் விகுதி நிலைத் தன்மையையும், சித்திய மொழிகளின் கொளுவுநிலைத் தன்மையையும், சேமிய மொழிகளின் உயிர்த் திரிவுத் தன்மையையும், ஆப்பிரிக்க மொழிகளின் பாலிசைவுத் தன்மையையும், அமெரிக்க மொழிகளின் தொகுதிநிலைத் தன்மையையும் ஒருங்கே கொண்டுள்ளது.

 
- மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர்1956