i தர்மாநுபந்தி புண்ணியம்; உயிர்கள் மேலும் மேலும் புண்ணியம் வருவதற்குக்
காரணமான தூய எண்ணத்தையும் தூயவாழ்க்கையையும் மேற்கொண்டு முடிவில் முக்தியடையும்படி
செய்வது.
ii அதர்மா நுபந்தி புண்ணியம் - அந்தப் புண்ணியத்தின் எல்லைவரை சுகமாக
வாழ்ந்தபோதிலும் மேலும் மேலும் பாவம் வருவதற்குக் காரணமான தீய எண்ணத்தையும் தீய
தொழிலையும் மேற்கொண்டு இறுதியில் நரகம் முதலிய தீயகதிகளை அடையும்படி செய்வது. அனுபந்தி என்பது - ‘தொடர்ந்து வருவது’ என்ற பொருளது; இவற்றின்
விரிவை, ‘நல்லவரம் புண்ணியம’ என்னும் (மேரு. 98) வாமனமுனிவர் கூற்றானும், ஸ்ரீபுராணம்,
பதார்த்தசாரம் முதலியவற்றானும் அறிக. ‘போகம்’ என்பது அனந்த சுகமுமாகும். தெரிவுறுத்தல்
- விளக்குதல். புணர்த்தல்-சேர்த்தல். வெருவு, தொழிற் பெயர்.
நூல்
முதற்
சருக்கம்
நாட்டுச்
சிறப்பு
5. |
பைம்பொன் னாவற் பொழிற்பர
தத்திடை |
|
நம்பு நீரணி நாடுள தூடுபோய் |
|
வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ |
|
திம்ப ரீடில1
தௌதய மென்பதே. |
(இ-ள்.)
பைம்பொன் - பொன்மலையாகிய மகாமேருவினை (நடுவில்) உடைய, நாவல் பொழில்-நாவலந்தீவின்
தென்பாலிருக்கிற, பரதத்திடை - பரதகண்டத்தில், நம்பும் நீர்-(எவ்வுயிரும்)விரும்பும்
நீர்வளத்தால், அணிநாடு-அழகு பெற்றநாடு, வம்பு வார் பொழில்- மணமிக்க உயர்ந்த
சோலை, ஊடுபோய் - வாயுமண்டலத்தி னிடையே
|