பக்கம் எண் :

Yasodara Kavium

- 13 -

(இ-ள்.) வானவர் போகம் - வானுலகத்திலுள்ளதேவபோகத்துக்கு உரியசுவர்க்கலோகமும், அசைவிலா - அழிவிலாநிலைபேறுடைய,  அளாகாபுரி - குபேரனுடைய அளகாபுரியும், அலால்-அல்லாமல், இசைவு இலாத-(தன்னோடு)ஒப்புக்கூறற்கு ஏற்றதுவேறொன்றும்  இல்லாததாகிய, இராசபுரம் அது - இராசமாபுரம், திசை - எண்திசையிலும், உலாம் - சென்று பரந்த, இசையும் - புகழும், திருவும்-(எண்வகைச்)செல்வமும், நிலாய்-(தன்னிடத்து) நிலவப் பெற்று, வசை - குற்றமென்பதே, இலா-இல்லாத தாகிய, நகர் அஃது-(ஒளதயத்தின்) தலைநகரமாகும்)

இராசமாபுரம் எவ்வகையிலும் சிறந்ததென்க.

‘இசையால் திசை போயது’ என்றார் திருத்தக்க தேவரும். இசையுடைய நாடு ஆகலின் வசையிலதாயிற்று. வசை, பழிப்பெனினுமாம்; ‘வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னு, மெச்சம் பெறாஅவிடின்‘ என்று (குறள், 238.) தேவர் கூறுவதனை அறிக.

‘திருவும் நிலாய் வசையிலா நகர’ என்றமையால் ஈண்டுக் கூறிய இசை பெரும்பாலும் ஈதல்மேற்று. ‘நிலை பேறுடைமையின்’அசைவிலாதது என்றார். இனி, அசைவு-வருத்தம் எனினுமாம். பசி, பிணிமுதலியவருத்தம் அளகாபுரிக் கின்மையால், ‘அசைவு இலா அளகாபுரி’ என்றார்; ‘உறுபசியு மோவாப்பிணியுஞ் செறுபகையுஞ், சேராதியல்வது நாடு’ என்று (குறள்.734.) கூறியிருப்பது காண்க. அளகாபுரி; குபேரன்நகரம். இராசபுரம் அதனை நிகர்க்கும். இசைவு உவமை. இராசபுரமது என்பதில் ‘அது‘ பகுதிப் பொருள் விகுதி. நகர் - புரம் எனவும், பட்டணம் எனவும், நாடு-தேசம் எனவும் வழங்கும்.  பலநாடுகளிலும் சிறந்து தலைமை வகித்திருப்பதனால்  இராசபுரம் என் பெயர்பெற்றதென்னலாம்.

இனி, ‘வானவர் போகம்’ என்பதற்கு, தேவர் உலகத்தைப் போல இன்பந் தருவது என்னலாம்.(2)