பக்கம் எண் :

Yasodara Kavium
 

- 3 -

 

யசோதர காவியம்

தற்சிறப்புப்பாயிரம்*

கடவுள் வாழ்த்து

 

1. உலக மூன்று மொருங்குணர் கேவலத்
  தலகி லாத வனந்த குணக்கடல்
  விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்
  கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம்.

(இதன் பொருள்.) உலகம் மூன்றும் - மூன்றுலகங்களையும், ஒருங்குஉணர் - ஒரே சமயத்தில் ஒருசேர உணரும்இயல்புடைய, கேவலத்து - கைவல்யபதத்தினையடைந்த, அலகு இலாத-எண்ணிறந்தனவாகிய, அனந்தகுணக்கடல்-அனந்தஞானாதிகுணங்கள் கடல் போல்நிறைந்த அருகத்பரமேஷ்டியின், இலகும் மாமலர் சேவடி-விளங்குகின்றசிறந்த தாமரை மலர் போன்ற சிவந்தபாதங்களை, வெவ்வினைவிலகி- தீயவினைகளின் நீங்கி, வீடு விளைப்பதற்கு - வீடு பேற்றினை உண்டாக்கிக்கோடற்கு (மோஷத்தை அடை தற்பொருட்டு), ஏத்துவாம்-யாம் துதிப்பாம்,(என்றவாறு.)

(கருத்துரை.) வினைகளின் நீ்ங்கிவீடு அடையவேண்டி முற்றும் உணர்ந்த கேவலியின் (கைவல்ய பதத்தினை எய்திய அருகத்பரமேஷ்டியின்) சேவடியை வணங்குவாம் என்க.

*

 

“தெய்வ வணக்கமுஞ் செயப்படு பொருளு மெய்தவுரைப்பது தற்சிறப்பாகும்” என்பது இலக்கணம்.