பக்கம் எண் :

Yasodara Kavium

- 4 -

(விரிவுரை.) கேவலத்து அனந்த குணக்கடல்சேவடியை வெவ்வினைவிலகி வீடுவிளைப்பதற்கு ஏத்துவாம் என இயைக்க.

உலகம் என்றது--அதிலுள்ள பொருள்களைக்குறிக்கும். 1அப்பொருள் ஜீவன் முதலாக ஆறுவகைப்படும்.

‘ஜீவன்முதலிய பொருள்கள் எதுவரைக் காணப்படுமோ அதுவரை உலகம்’ என்னும் பொருள்பட, ‘லோக்யந்தேஜீவாதய:  பதார்த்தாயஸ்மிந்ஸ: லோக‘;(பஞ்சாஉரை) என்பது ஈண்டு அறிதற்பாற்று.  உலகம் மூன்றாவன; கீழு

லகம், மத்தியமவுலகம், மேலுலகம் என்பன. நரகர் வசிக்கும் 2 கீழுலகத்தினை, 3 இன்னாவுலகம்‘ என்றும், தேவர் வசிக்கும் மேலுலகத்தினை ‘அவ்வுலகம்‘ என்றும், நாம் வசிக்கும் மண்ணுலகத்தினை, ‘இவ்வுலகம்‘ என்றும் தேவர் கூறியதனானும், “உலகமொரு மூன்று மேத்த” (சீவக. 1) என்றும், “வையமூன்றுமுடனேத்த” (சீவக.3019) என்

1 பொருள் ஆறுவகை அவையாவன :-
 
1.

ஜீவன்:

  ஞானம் முதலிய குணங்களை யுடையது.
   
2.

புத்கலம்:

  ஐம்பொறிகளால்நுகரப்படுவனவும், அணுவும், அணுக்கூட்டங்களும்.
   
3.

தர்மம்:

  ஜீவனும் புத்கலமும் செல்வதற்கு (இயங்குவதற்கு) இத்துணைக் காரணமானது;           (புண்யகாரணமெனப் பொருள் படுந் தர்மத்தின் வேறானது. 
   
4. அதர்மம்;
  ஜீவனும் புத்கலமும் நிற்றலுக்குத் துணைக்காரணமானது. 
   
5. ஆகாசம்;
  பொருள் அனைத்திற்கும் இருக்க இடந்தருவது. 
   
6. காலம்;
  சமயம் நாழிகை முதலியவற்றிற்குக் காரணமானது.
   
2 நாகர்லோகம் எனினுமாம். (சீவக. 2813 - உரை)
   
3 ‘அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை யிருள்சேர்ந்த, இன்னாவுலகம்புகல்.‘(குறள்.243.)
  ‘அருளில்லார்க் கவ்வுலகமில்லைப் பொருளில்லார்க், கிவ்வுலகமில்லாகியாங்கு.’       
 (குறள்.247).