எண்ணற்ற வெந்துயர் அடைதலால் உண்டாகும் பழி, உலகோர்
கூறும் நிந்தைமொழியாம். ‘உலகம் பழித்தது’
என்றார் (குறள். 280) தேவரும். ‘புகழ்மொழி புணையாக‘ என்பது
‘இவ்வுரை யெனுற் தோணி‘ (மேரு. 727.) என்றதனோடு ஒப்பிடற்பாலது. மாதவம் - திகம்பரதவம்.
தவக்கடல் ஆடுதலாவது, எப்பொழுதும் தவஞ்செய்து இன்புறுதல். ‘அவர் நற்குணக் கடலாடுதல‘என்று
கவிச்சக்கரவர்த்தி கூறியிருப்பது ஈண்டு அறியத்தகும். மை - குற்றம்: முக்குற்றம்.
அவை: ஆசை கோபம் மயக்கம். ‘இனியென்றான்‘ என்றும் பாடம்.
(94)
314. |
இன்சொல் மாதரு மிளங்கிளைச்
சுற்றமு |
|
மெரித்திர ளெனவஞ்சிப் |
|
பொன்செய் மாமுடிப் புதல்வருட்
புட்பதந் |
|
தற்கிது பொறையென்றே |
|
மின்செய்
தாரவன் வெறுத்தன னரசியல் |
|
விடுத்தவ ருடன்போகி |
|
முன்சொன் மாமலர்ப் பொழிலினுண்
முனிவரற் |
|
றெழுதுநன் முனியானான். |
(இ-ள்.) மின்
செய் தாரவன் - ஒளி செய்யும் மாலையுடையனாகிய மாரிதத்தன், இன்சொல் மாதரும் - இனிய
சொல்லையுடைய மகளிரையும், இளம் கிளைச் சுற்றமும் - இளைஞராகிய சுற்றத்தையும், எரித்திரள்
என அஞ்சி தீயின் திரள் என்று கருதி அஞ்சி, அரசுஇயல் வெறுத்தனன் -
அரசியலில் வெறுப்புற்று , புதல்வருள் புட்பதந்தற்கு இது பொறை என்று - தன் புதல்வர்களுள்
புட்பதந்தன் என்பவனுக்கு இவ்விராஜ்ஜிய பாரம் உரித்தாகும் என்று, பொன் செய் மாமுடி
விடுத்து - பொன்னால் செய்த முடியைச் சூட்டி, அவருடன் - அபயருசி அபயமதி என்பவருடன். முன்சொல் மாமலர் பொழிலினுள் போகி-முன் (யசோ, 24ல்) கூறிய பூஞ்சோலையில்
சென்று, முனிவரன் தொழுது - சுதத்த முனிவரை வணங்கி (தீக்ஷை பெற்று), நன் முனி யானான்
- சிறந்த (ஜிந) முனியானான்.
மாரிதத்தன், துறவு பூண்டானென்க.
|