பொறை - பாரம். ‘அரசபாரமவை பொறை‘ (சூளா: மந்.
37.) ‘பொன்செய் மாமுடிப் புதல்வருள்‘ என்பதற்கு, பொன்னாற் செய்த சிறந்த முடியைச்
சூடுதற்குரிய புதல்வர்கட்குள் என்று நேரே பொருள் கூறவும் அமையும்.
(95)
315. |
வெய்ய தீவினை வெருவுறு மாதவம |
|
விதியினின்
றுதிகொண்டான் |
|
ஐய தாமதி சயமுற வடங்கின |
|
னுடம்பினை
யிவணிட்டே |
|
மையல்
வானிடை யனசனர் குழாங்களுள் |
|
வானவன்
றானாகித் |
|
தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம் |
|
தொகுதியின்
மகிழ்வுற்றான். |
(இ-ள்.) (மாரிதத்த
முனிவன்), வெய்ய தீவினைவெருவு உறும் மாதவம் விதியினின் - கொடிய வினைகளும் அஞ்சத்
தக்க சிறந்த தவத்தினது முறைப்படி, துதி கொண்டான் - துதி செய்தவனாகி, அனசனர் குழாங்களுள்
- உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் சிராவகர் கூட்டத்திலுள்ளவரும், ஐயதுஆம் - வியக்கத்தக்கதாகிய,
அதிசயம்உற - (ஏழுவிதருத்தியாகிய) அதிசயம் உண்டாக, அடங்கினன் - (ஐம்புலன்களும்)
அடங்கினவனாகி, உடம்பினை இவண் இட்டு -(தன்) பூதவுடலை இவ்வுலகத்தில் போகட்டு, வான்
இடை - தேவருலகில், வானவன் ஆகி - தேவப்பிறவி யெய்தி, மையல் - (இன்பத்து) மயங்கச்
செய்யும், தொய்யில் மாமுலை - அழகிய ஸ்தானங்களையுடைய, சுரவரர் மகளிர்தம் தொகுதியில்
- தேவமாதர்களின் கூட்டத்தில், மகிழ்வு உற்றான் - கூடி இன்புற்றான்.
மாரிதத்த முனிவன் தேவனாகித் தேவியருடன் இன்புற்றா னென்க.
விதியினின்று உதி கொண்டான் என்று பிரித்தும் பொருள்
கொள்ளலாம். உதிதல்-உதித்தல். ‘உதிதர வுணர்வல்‘ என்றார் (சீவக. 1340) திருத்தக்கதேவர்.
ஐ: ‘ஐ வியப்பாகும்‘. (தொல்)தரம், அசை. ஏழுவித ருத்தியாவன: புத்தி, விக்ரியா,
தப, பல, ஒளஷத, ரஸ, அக்ஷீணம் என்பன. |