பக்கம் எண் :

Yasodara Kavium


- 327 -

பதினறு குற்றமும்‘. என்னுஞ் சிலப்பதிகாரம் (ஊர்காண் காதை- 186, 7ன்உரை) காண்க.  வாசமும் ஒளியும் ஒர் ஓசனை வீசுவதனை,  ‘வாசமொரோசனை நின்று நாறிடும்,  தேசுமோரோசனை சென்றெறித்திடும்,  தூசணி மாசெய்தா மேனியின் குணம’ என்று (மேரு, 510)  வாமன முனிவரும் கூறிய தறிக.  திளைத்தல் - நிறைதல்.  அணிமா முதலிய எட்டினை, ‘அணிமா மஹிமா... பூதய:’  என அமர கோசத்திலும், மன்னிய வணிமா மற்றை மஹிமாவே கரிமாவோடு, பின்னுறு லமிகா ப்ராப்தி பெறும் பிராகாமியங்கள், முன்னுறு மீசத்வம் பின் முற்றிய வசித்துவந்தான்,உன்னிய நூல்களோது மோரிரு நான்கே சித்தி‘  என்று சூடாமணி(பல்பெயர் : 12,81.) நிகண்டிலும் கூறியதனால் அறியலாகும்.  அவதி - பவப்ரத்யயம்: ‘பவத்தைச்சார்ந் தெழுந்த வோதி‘ (மேரு. 485) என்றது அறிக.  மகர்த்திக தேவராதலின், ‘இணையிலா இன்பம்’ என்றார்.               (100)

320.  வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது
  தருவது சுரகதி தந்து பின்னரும்
  பொருவறு சிவகதி புணர நிற்பது
  திருவற நெறியது செவ்வி காண்மினே.

 (இ-ள்.) திருவற நெறி - திருவறத்தை யுடைய சமயமானது, வெருவு உறு வினைவலி -அஞ்ச வருகின்ற கொடிய வினைகளின் வலிமையை, விலக்கு கிற்பது - விலக்கும் வன்மையுடையது;  சுரகதி தருவது - (தன்னையுடையார்க்குத்) தேவகதியை நல்குவது, தந்து - அதனை அளித்து, பின்னரும் - அதன் பின்னும், பொருவு அறு - ஒப்பற்ற, சிவகதி புணரநிற்பது - மோக்ஷகதியை அடையுமாறு நிற்பது:  செவ்வி காண்மின் - அதன் தன்மையை (இந்நூலின்கண்) அறிமின்.  (எ-று.)

இந்நூலிற் கூறும்திருவறநெறி, வினைகளைத் தவிர்த்து முக்தி எய்துவிப்பது என்க.

சிவகதி - இன்பந்தரும் கதி.  திருவறம் - ஜிநதருமம்.

யசோதர காவியம் உரையுடன் முற்றும்

-------