குணக்கடல்: - குணங்களுக்குக்
கடல் போன்றவன்; (அனந்த ஞானாதி) குணங்கள் நிறையப் பெற்றவன்; வேற்றுமைத்தொகைப்புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகை, ‘அலகையில்லாக் குணக்கடலே.’ ‘குணக்கடல்’ ‘இன்பநிறை கடல்‘1
என்று திருத்தக்க தேவரும், ‘பகரலாக் குணக்கடலே‘2
என்று உதீசிதேவரும் கூறியுள்ளதை அறிக. வெவ்வினை(யின்) விலகி என இயைக்க. வெவ்வினை;
ஈண்டுக் காதிவினை. வீடு-கைவல்யநிலை; மோஷம். வீடு
பெறுவதற்காகவே
கடவுளை வணங்குவது. இதனை,
பொன்குண மாமணி பூந்துகிலாதி பொருளடியேன் |
முன் கொணர்வீரென்று மோகிக்கிலே னிந்தமூவுலகமும் |
நன்குணர் கேவல நாயகரே முன்பு யானுடைய
(றதே3) |
வெண்குணம் யான்பெற வெம்பெருமானை
யிரக்கின் |
என்று
கூறியதனா லறிக.
மலர்,
ஈண்டுத் தாமரையையுணர்த்தும்; ‘பூவெனப்படுவது பொறிவாழ்பூவே‘ என்றது காண்க. சேவடி
- செம்மை அடி; திருந்திய திருவடி யெனினுமாம். ‘ வெவ்வினை விலகி மாமலர் இலகும் சேவடி‘
என இயைத்து,
வெவ்வினை விலகியவுடன் தேவ ரியற்றிய
பொற்றாமரையின் விளங்கி ஏகும் சிறந்தபாதம் எனினும் அமையும். ‘மலர்மிசை
யேகினான்‘ (குறள். 3), ‘மலர்மிசைநடந்த மலரடி’ (சிலப்.நாடுகண். 204), எனப்பலவிடத்தும்
வருவன அறிக. வெவ்வினை - பண்புத் தொகை; வெவ்வினைவிலகி - ஐந்தாம் வேற்றுமைத்
தொகை. (1)
2. |
நாத னம்முனி சுவ்வத னல்கிய |
|
தீது
தீர்திகழ் தீர்த்தஞ்செல் 4கின்றநாள் |
|
ஏத மஃகி யசோதர னெய்திய |
|
தோத
வுள்ள மொருப்படு கின்றதே. |
1 |
சீவக. 1244, 2813, 375 |
2 |
திருக். 31. |
3 |
திரு¸£, 36. |
4 |
தீ்ர்த்தன்செல். |
|