பக்கம் எண் :

Yasodara Kavium

- 7 -

குணக்கடல்: - குணங்களுக்குக் கடல் போன்றவன்; (அனந்த ஞானாதி) குணங்கள் நிறையப் பெற்றவன்; வேற்றுமைத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை, ‘அலகையில்லாக் குணக்கடலே.’ ‘குணக்கடல்’ ‘இன்பநிறை கடல்‘1 என்று திருத்தக்க தேவரும், ‘பகரலாக் குணக்கடலே‘2 என்று உதீசிதேவரும் கூறியுள்ளதை அறிக.  வெவ்வினை(யின்) விலகி என இயைக்க.  வெவ்வினை; ஈண்டுக் காதிவினை.  வீடு-கைவல்யநிலை; மோஷம். வீடு

பெறுவதற்காகவே கடவுளை வணங்குவது. இதனை,

பொன்குண மாமணி பூந்துகிலாதி பொருளடியேன்
முன் கொணர்வீரென்று மோகிக்கிலே னிந்தமூவுலகமும்
நன்குணர் கேவல நாயகரே முன்பு யானுடைய (றதே3)
வெண்குணம் யான்பெற வெம்பெருமானை யிரக்கின்

என்று கூறியதனா லறிக.

மலர், ஈண்டுத் தாமரையையுணர்த்தும்; ‘பூவெனப்படுவது பொறிவாழ்பூவே‘ என்றது காண்க.  சேவடி - செம்மை அடி; திருந்திய திருவடி யெனினுமாம். ‘ வெவ்வினை விலகி மாமலர் இலகும் சேவடி‘ என இயைத்து,

வெவ்வினை விலகியவுடன் தேவ ரியற்றிய பொற்றாமரையின் விளங்கி ஏகும் சிறந்தபாதம் எனினும் அமையும்.  ‘மலர்மிசை யேகினான்‘ (குறள். 3), ‘மலர்மிசைநடந்த மலரடி’ (சிலப்.நாடுகண். 204), எனப்பலவிடத்தும் வருவன அறிக. வெவ்வினை - பண்புத் தொகை; வெவ்வினைவிலகி - ஐந்தாம் வேற்றுமைத் தொகை.                      (1)

2. நாத னம்முனி சுவ்வத னல்கிய
  தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் 4கின்றநாள்
  ஏத மஃகி யசோதர னெய்திய
  தோத வுள்ள மொருப்படு கின்றதே.

 

1 சீவக. 1244, 2813, 375
2 திருக். 31.
3 திரு¸£, 36.
4 தீ்ர்த்தன்செல்.