பருந்ததும்
நிழலும் போல
பாலரும்
அவரும் ஒன்றாய்
இருந்ததைச் சொல்லச்
சொல்ல
இன்பமுண்
டாகும் நெஞ்சே
உலகெனும் பள்ளி
யின்பால்
உவந்தவர்
வாழ்வுக் கான
பலவற்றைக் கற்றுக்
கற்றுப்
பகுத்தறி
வுற்றார் நெஞ்சே
கற்பிக்க ஆசான்
அற்ற
கலக்கமே
இல்லா வண்ணம்
பொற்புடன் கற்று
வந்த
புதுமையும்
என்னே நெஞ்சே
பெரியதந் தைது
ணையின்
பெட்புறு
வாணி பத்தில்
சிரியாநாட்
டுக்குச் சென்று
சிறுவரும்
வந்தார் நெஞ்சே
பதிமூன்று வயதுப்
பாலர்
பாங்குடன்
அவரின் பின்னே
புதியபல் லிடங்க
ளுக்குப்
போய்வர
லானார் நெஞ்சே
சிரியாவின்
எழிலைக் காணச்
சென்றிடும்
வேளை ஆங்கே
விரிவாகக்
காட்சி கண்டே
விம்மித
முற்றார் நெஞ்சே
இயற்கையின்
அழகில் தோய்ந்தே
இணையிலா
மகிழ்ச்சி
யுற்று
நயமிகு அறிவைப்
பெற்றே
நாடோறும்
வளர்ந்தார்
நெஞ்சே
பாலையின் பசுமை
கண்டார்
பறவைகள்
குரலை ஆங்கே
சீலமாய்க்
கேட்டுக் கேட்டுச்
சிந்தனை
செய்தார் நெஞ்சே
|