கொண்டநல் அன்பி
னாலே
குழைந்துமே
இறைவன் தன்னைக்
கண்டநம் நாய
கத்தின்
கண்களே
கண்கள் நெஞ்சே
ஆவலாய் இறைவ
னின்பால்
அருமுரை
செய்த அண்ணல்
நாவேநா என்றே
இங்கு
நவின்றிடு
வாயென் நெஞ்சே
புவியினைப் படைத்த
ளித்தோன்
பொன்னுரை
கேட்ட அண்ணல்
செவிகளே செவிகள்
என்று
செப்பிடு
வாய்என் நெஞ்சே
சிரத்துடன்
சேர்ந்து தாழ்ந்து
சிறப்பெலாம்
கண்ட அண்ணல்
கரங்களே கரங்கள்
என்று
கழன்றிடு
வாயென் நெஞ்சே
மேலோன்மெய்ப்
பாதை நோக்கி
மேன்மையாய்
நடந்த அண்ணல்
காலேகால் என்று
சொல்லிக்
களிப்புறு
வாயென் நெஞ்சே
படைத்தவன் உலகம்
சென்ற
பாங்குடை
நமது அண்ணல்
உடலதே உடலாம்
என்றே
உரைத்திடு
வாயென் நெஞ்சே
நெஞ்சினை அவனுக்
கீந்து
நிறைவினைக்
கண்ட அண்ணல்
நெஞ்சமே நெஞ்ச
மென்று
நீயுணர்ந்
திடுவாய் நெஞ்சே
இறையவன் அன்புக்
காக
இதயத்தை
அர்ப்ப ணித்த
அறையொணா நாய
கத்தின்
அறிவதே
அறிவாம் நெஞ்சே
சாத்மீகத்
தோடு வேண்டி
சாந்தியைப்
பெற்ற அண்ணல்
ஆத்மாவே ஆத்மா
வென்றும்
அறைந்திடு
வாயென் நெஞ்சே
படைப்பிற் சிறந்த
பரிபூரண நாயகம்
அறங்காத்த
நிலயில் கொண்ட
ஆன்மாவின்
நிறைவில் அண்ணல்
திறங்காணும்
நிலையில் நெஞ்சில்
திகைப்பதே
தோன்றும் நெஞ்சே
மோனத்தின்
முடியில் நின்று
முழுமையாம்
உணர்வில் ஒன்றி
ஞானத்தின்
முடியைக் கண்ட
நற்றிறன்
என்னே நெஞ்சே
காட்சிகள்
கடந்து நின்று
காரண
மூலங் கண்டே
ஆட்சிக்கு முதல்வன்
மார்க்கம்
அளித்ததும்
என்னே நெஞ்சே
அவனருள் பெரிதே
என்றே
அவனியோர்
எண்ணும் வண்ணம்
அவனரு ளாலே செய்த
அதிசயம்
பெரிதே நெஞ்சே
அடங்கிய மனமும்
வாக்கும்
அடங்கிய
வாழ்வும் கண்ட
திடம்படு வெற்றி
அந்தத்
தியானமே
! சொல்வாய்
நெஞ்சே
பணிந்திடும்
பண்பு தன்னை
பகலிர
வெல்லாம் கொண்டே
அணிந்தவர்
வெற்றி தன்னை
அவனிகண்
டதுவே நெஞ்சே
உலையினில்
மெழுகாய் நெஞ்சம்
உருகிமெய்ப்
பொருளைக் கண்ட
நிலைதனை எண்ணி
எண்ணி
நீயுயர்ந்
திடுவாய் நெஞ்சே
முப்போதும் மட்டு
மன்றி
முழுப்போதும்
அவனை எண்ணி
செப்பரும் வெற்றி
கொண்டார்
சீர்மைபா
டிடுவாய் நெஞ்சே
தொழுதவன் அன்பைக்
காக்கும்
தூய்மைசேர்
ஒளியை இங்கு
முழுமையாய்க்
கண்ட அண்ணல்
முழுத்தவம்
என்னே நெஞ்சே
தெளிவினில்
ஒளியும் அந்தத்
தேசினில்
களியும் காட்டி
வெளியெலாம்
வாழ்வைக் கண்ட
விந்தையும்
என்னே நெஞ்சே
புகலுவார் மாற்ற
மெல்லாம்
புறம்போகு
வண்ணம் செய்தே
அகலுல கத்தை
வென்ற
ஆற்றலும்
சிறிதோ? நெஞ்சே
வேரிட்ட இறைவன்
மாண்பில்
விதவிதக்
காட்சி கண்டு
போரிட்ட மக்கள்
உள்ளப்
புண்ணாற்றி
னாரே நெஞ்சே
தானென்ற உணர்வ
ழித்துத்
தரணிக்குத்
தம்மைத் தந்தார்;
மோனத்தால்
மூலங் கண்டார்
முழுமையும்
என்னே நெஞ்சே
உயிருடன் உணர்வும்
ஒன்ற
ஒருவனின்
அருளில் மூழ்கி
செயிரிலாக்
காட்சி கண்ட
சீர்மையைப்
பாராய் நெஞ்சே
அகஒளி பெருக்கத்
தாலே
அதிசயம்
என்று சொல்ல
முகத்தொளி
கூட்டி நின்ற
முழுமையை
உரைப்ப தாமோ
!
ஒருவருக் கிணையில்
லாத
ஒப்பிலான்
நினைவில் ஆழ்ந்தே
ஒருவரும் அடையா
வெற்றி
உற்றதும்
பெரிதே நெஞ்சே
|