| தடுத்தாட்கொண்ட புராணம் | 173 |
Periya Puranam
140.
(இ-ள்.) அத்தர்..............ஆண்டவர்
(இங்கு எழுந்தருளியுள்ள
அடியார்கள்) உலகத் தந்தையாகிய சிவபெருமானால் விரும்பி முன்னே
ஆட்கொள்ளப் பெற்றவர்கள்; அன்பினால்........சிந்தையார் - அன்பு
மேலீட்டினாலே தம்மேனியில் மயிர்ப்புளகமும் உடற்கம்பமும் நிகழும்படியான
மனக் கசிவுள்ளவர்கள்; கை......கடப்பாட்டினார் - தமது கடமையாகவே
கொண்டு கைத்தொண்டு செய்பவர்; இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார் -
இத்தன்மை உடையவர்களுடன் எண்ணிலாத அடியார்கள். 5
141. (இ-ள்.)
மாசிலாத........புனிதர்கள் - குற்றமற்ற உருத்திராக்கம்
பூண்ட தமது திருமேனியிலே மேலே பூசிய திருநீற்றின் தூய்மைபோலவே
உள்ளும் புனிதத்தன்மை வாய்ந்தவர்களாம்; தேசினான்.......விளங்கினார் -
இவர்கள் தமது ஒளியினால் எவ்வுலகங்களையும் விளக்கஞ் செய்வார்கள்;
பேச......பிறங்கினார் - ஆதலின் இவ்வளவென்று வரையறுத்து வாக்கினாற்
கூறமுடியாத பெருமையில் விளங்குபவர்கள். 6
140. (வி-ரை.)
அத்தர் - தந்தை. உலகத்தின் தோற்றம்,
நிலை,
ஒடுக்கங்கட்குக் காரணராதல்பற்றி அத்தர் என்றார். “அத்தர் பியன்மேலிருந்து
இன்னிசையா லுரைத்த பனுவல்“ என்பது திருஞானசம்பந்த சுவாமிகள்
தேவாரம்.
வேண்டி முன் ஆண்டவர் - உலகத் தந்தையாராகலின் உலகரை
வழிப்படுத்த வேண்டி உலகர் முன்னே வெளிப்பட ஆட்கொள்ளப் பெற்றவர்.
“.................தொண்டரை
விளக்கங் காண
நன்னெறி யிதுவா மென்று ஞாலத்தோர் விரும்பி யுய்யு
மந்நெறி காட்டு மாற்றால் அருட்சிவ யோகி யாகி“.
-
திருநீலகண்ட நாயனார் புராணம் - 10 |
“..................மாயை
வண்ணமே கொண்டுதந் தொண்டர்
மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்.“
-
இயற்பகை புரா - 4 |
“செல்வ
மேவிய நாளி லிச்செயல் செய்வ தன்றியு மெய்யினால்
அல்ல னல்குர வான போதினும் வல்ல ரென்றறி விக்கவே.“
-
இளையா - புரா - 6 |
என்பனவாதி திருவாக்குக்களினால்
இத்திருக் கூட்டத்திலே உள்ள
அடியார்களை அத்தர் வெளிப்பட ஆண்டது அவர்களது பெருமையைக்
காட்டி உலகவர்களை வழிப்படுத்த வேண்டியே என்பது விளங்கும்.
ஆண்டவர் - ஆட்கொள்ளப்பெற்றவர் என்று செயப்பாட்டுவினைப்
பொருளில் வந்தது. “அகலிடத்தவர் முன் ஆளதாக“ என்பது சுந்தரர்
தேவாரம்.
இவ்வாறன்றி “அத்தர் வேண்டி முன் ஆண்டவர்“
என்பதற்குச்
சிவபெருமானால் விருப்பத்தினாலே முற்காலத்தே ஆட்கொள்ளப்
பெற்றவர்கள் என்பாருமுண்டு. “.......உறழ்ந்த கல்வி யுடையானும் ஒருவன்
வேண்டும்என இருந்து, துறந்த முனிவர் தொழும் பரவை துணைவாநினைத்
தோழமை கொண்டான்“ என்றும், “.....பாடும் பணிநீ கூடும்
பொருட்டு..நின்னைத் தொண்ட னென்னக் கொண்டனன்“ என்றும்
வருவனவாதி பாட்டுக்களை நோக்கி இவ்வாறு கூறுவர். இது உபசார
வழக்கென்க, எல்லா உயிர்களையும் இறைவன் விரும்பி ஆட்கொள்வான்
ஆதலால்.
அன்பினால்
- ஆளாகக் கொண்டதாற் பொங்கி எழுகின்ற அன்பு
காரணமாக. அன்பினால் ஆண்டவர் என்றும், அன்பினால் தழைந்து என்றும்
ஈரிடத்தும்கூட்டி உரைப்பதுமாம்.
மெய்த் தழைத்து - மெய்
- மேனி. தழைந்து - விதிர்ப்பினால்
மயிர்க் கூச் செறிந்து பொங்கி. மெய்விதிர்த்தல்
- உடல் நடுக்கம்
உண்டாதல்; அன்புமேலீட்டால் உண்டாகும் மெய்ப்பாடுகளில் ஒன்று.
“மெய்தான் அரும்பி விதிர்
|
|
|
|