| 98 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
மொழி வேதங்கள்;
தண்டலை பலவும் - தாதகி பலவும் - எங்கும்
சோலைகள் பலவுள்ளன; ஆத்தியும் பலாமரங்களும் உள்ளன.
(வி-ரை.)
பாத செம்பஞ்சி எங்கும் என்றதனால் ஆடல் குறித்தவாறு.
|
“பாடலாடல்
இன்னியங்கள் பயிறன் முதலாம் பண்ணையினில்
நீடு மினிய வினோதங்கள் நெருங்கு காலந் தொறுநிகழ
மாடு விரைப்பூந் தருமணஞ்செ யாரா மங்கள் வைகுவித்து”
-
கழறிற்றறிவார் நாயனார் புராணம் - 154
|
என்று பின்னர் எடுத்துரைக்குமாறும்
காண்க.
விபஞ்சி -
யாழ்வகைகளுள் ஒன்று. வளரிசை - என்றதனை
யாழுடனும் சேர்க்க. யாழுங் குழலும் இன்னிசைக் கருவிகளிற்
சிறந்தவையாதலின் அவையிரண்டும் சேர்த்து யாழ் - இசைக்குழல் என
இங்குப் பேசப்பெற்றன. “குழலினிது யாழினிது” என்று சேர்த்து நாயனார்
எடுத்துக் காட்டியமை காண்க.
வண்டறை குழல்
- பெண்கள் வேய்ங்குழற் கானஞ் செய்யும்போது
அடுத்துக் கூந்தலில் உள்ள வண்டுகளும் ஒத்துச் சத்தித்தன ஆதலின்
இரண்டையும் ஒன்று சேர்த்து வளரிசை என்றார் என்பதுமாம்.
இருக்கை
- இருப்பிடம், இருக்கு + ஐ (இரண்டாம் வேற்றுமை யுருபு)
வேதத்தை என்க; இருக்கு வேதத்துக்குப் பொதுப்பெயர். “தூயகா விரியி
னன்னீர் கொண்டிருக் கோதி யாட்டி” என்ற தேவாரம் காண்க. மெய்யினாற்
செய்யும் தொண்டும், வாய்த்தொண்டும் கூறியவாறு. இவை மனத்தொண்டும்
இன்றியமையாது உடனே பெறுதலும் காண்க.
தண்டலை பல
- சோலைகளே தொண்டர்க் கிருப்பிடமாகவும்,
அவ்விடமே வேத கானம் நிகழுமிடமாகவும் உள்ளனவாதலும்,
அவ்விடங்களே யாழ் - குழல் - ஆடல் - பாடல் - பயிலும் இடமாதலும்
குறிப்பிட்டமை காண்க. தண்டலை - சோலை. தாதகி ஆத்தி. பல - பலா.
இப்பாட்டிற் சொல்லியவை சொல்லணியாய்க் கூறிய
துணையேயன்றிப்
பொருளியல்பில் ஒன்றற்கொன்று வேறுபட்ட பொருள்களென வெளித்
தோற்றத்தில் தோன்றினும் அழகிய தொடர்புபெற்ற ஒரே உள்ளுறை
கொண்டனவாதல் கண்டுகளிக்கத் தக்கதாம். அந்நாட்டு மக்களது
இன்பவாழ்க்கையின் இயல்பு கூறியவாறு.
இவ்வாறே மேல்வருகின்ற இரண்டு பாட்டினும் கண்டுகொள்க.
32
| 83.
|
மாடுபோ
தகங்க ளெங்கும் வண்டுபோ தகங்க
ளெங்கும் |
|
| |
பாடுமம்
மனைக ளெங்கும் பயிலுமம் மனைக
ளெங்கும்
நீடுகே தனங்க ளெங்கும் நிதிநிகே தனங்க
ளெங்கும்
தோடுசூழ் மாலை யெங்குந் துணைவர்சூழ் மாலை
யெங்கும்.
|
33 |
இது சோலைகளினின்றும்
போந்து மாளிகைகளைக் கூறுவது
(இ-ள்.)
வெளிப்படை.
(வி-ரை.)
போதகம் - யானைக் கன்று, மாடு
- பக்கம். போது +
அகங்கள் - மலர்களின் உள்ளிடங்கள். போதுகள் அலரும்போது
வண்டுகள்குடையும் என்க. பாடும் + அம் + மனைகள் + எங்கும் - பாடல்கள்
பாடப்பெறும் அழகிய வீடுகள் எங்குமுள்ளன. பயிலும் + அம்மனைகள் -
பெண்கள் பயில்கின்ற அம்மனை என்கின்ற விளையாட்டுக்களும் எங்கும்
உள்ளன. சேதனம் - கொடி. நிதி + நிகேதனம்
- நிதிகள் பலவகையும்
நிறைந்த சேமவைப்புகள். பொன்னாற் செய்யப்பெற்ற கோயில் என்றும்
கூறுவர். தோடு - இதழ்கள் செறிந்த பூக்கள்.
சூழ்மாலை - பூக்கள்
|
|
|
|