பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1095

 

மல்க" (354) என்றவிடத் துரைத்தவையும் பார்க்க. அன்றியும்,
மூன்றெரி என்னும் சைவயாகங்கள் மழைக்குக் காரணமாம்; மழையின்றி
உலகம் போற்றல்பெறாது என்பதனாலும் முழுதுல கிளையும் போற்ற
மூன்றெரி புரப்போர்
என்றார் என்பதுமமையும். எரிபுரப்போர் -
மறையவர்.

     மலர்ச்சோலை வேலி - மலர்ச்சோலைகள் நாற்புறமும் சூழ்தலால்
அவை அந்நகரத்துக்கு வேலியிட்டனபோல உள்ளன என்பது. 25

856.



காதலா லரச னுற்ற வருத்தமுங் களிப்பி னோடு
தீதில்வன் சேனை செய்யுந் திருப்பணி நேர்ப டாமை
மேதினி மிசையே யெய்த்து வீழ்ந்திளைப் பதுவு நோக்கி
மாதவக் கலயர் தாமு மனத்தினில் வருத்த மெய்தி,



26
     
857


.
சேனையு மானை பூண்ட திரளுமெய்த் தெழாமை நோக்கி
"யானுமிவ் விளைப்புற் றெய்க்கு மிதுபெற வேண்டு"
மென்று தேனலர் கொன்றை யார்தந் திருமேனிப் பூங்கச்
சேய்ந்த மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்த
                                       லுற்றார்.



27

     856. (இ-ள்.) வெளிப்படை. தான் கொண்ட ஆசையினால் அரசன்
அடைந்த வருத்தத்தினையும், யானைகளோடு குற்றமற்ற சேனைகளும் தாம்
செய்யும் திருப்பணி நேர்படாமையினால் நிலத்தின் மேலே களைத்து வீழ்ந்து
இளைப்பதனைபும் மாதவராகிய கலயனார் நோக்கி மனதில் வருத்தங்
கொண்டு, 26

     857. (இ-ள்.) வெளிப்படை. சேனையும், யானைகளைக் கொண்ட
கூட்டமும் இளைத்து மேல் எழமாட்டாதிருக்கிற நிலையை நோக்கி, "நானும்
இந்த இளைப்பினைப் பொருந்தி மெலியும் இப்பேறு பெறவேண்டும்-" என்று
உட்கொண்டு, தேன் நிறைந்து அலர்கின்ற கொன்றை யணிந்த இறைவனது
திருமேனியிற் பூண்ட பூங்கச்சிற்பொருந்திய பெரியவலிய கயிற்றைப் பூட்டித்
தமது கழுத்தினால் வருந்தி இழுக்கத் தொடங்கினார். 27

      இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     856. (வி-ரை.) காதல் - "அங்கணன் செம்மைகண்டு
கும்பிடக்கொண்ட ஆர்வம்" (853). காதலால் உற்ற வருத்தம் - காதல்
நிறைவேறாததால் அக்காதல் காரணமாகப் பொருந்திய வருத்தம்.

     வருத்தமும் - இளைப்பதுவும் நோக்கி - அரசனாகிய
ஏவுதற்கருத்தாவும், யானை சேனைகளாகிய இயற்றுதற் கருத்தாவும் என்ற
இருதிறத்தாரின் வருத்தமும் சொல்லப்பட்டன.

     களிற்றினோடு - சேனை - யானைகளுடன் சேனைவீரர்களும்.

     தீதில்வன் சேனை - வலியசேனைகளேயாயினும் இங்குத் தமக்குரிய
கொலைப்போர் முதலிய தீங்கு ஒன்றும் செய்தில என்பார் தீதில் - என்றார்.

     நேர்படாமை - முற்றுப்பெறாமை. நேர்படல் - பொருந்துதல்.

     "காலநேர் படுதல் பார்த்தய னிற்ப" (219) "காணு நேர்பா டெண்ணுவார்"
என்றவைகாண்க.

     எய்த்து வீழ்த்து இளைப்பதுவும் - கைவராத பணியில் மேலும்
மேலும் முயல்வதனால் எய்ப்பு உளதாம்; எய்ப்பு மிகவே உடல் விழும்;
பன்முறை வீழ்ந்ததனால் இளைப்பு உண்டாகும்; இளைப்பு அதிகரிக்கவே,
வீழ்ந்தவர் மீண்டும் மேல் எழாத நிலை உண்டாம். இதனையே வரும்
பாட்டில் "எய்த்து எழாமை நோக்கி" என்றார். நோக்கி - கூர்ந்துபார்த்து.
வருத்தமும் இணைப்பதுவும் - இரண்டனுருபுகள் தொக்கன.