பக்கம் எண் :


மூர்த்திநாயனார்புராணம்1275

 

காலத்தைப் போக்காதே" என்ற திருவாசகங்கள் காண்க. இக்கொடியவன்
தனது கொடுஞ்செயலினால் தன் நாளை அன்றைக்கு முடித்துக்கொண்டான்
என்பது பின்னர்க் காணப்படும். 991 பார்க்க.

     வன்மைக் கொடும் பாதகன் - தனது சமயமாறுபாடு ஒன்றே பற்றிச்
சிவாபராதமாகிய பெரும்பாதகத்தைக் கொடுமையாக வலிந்து செய்தவன்.

     மாய்ந்திட - இறந்துபட. "மாய்ந்திட - தன்மை மன்னரைச் சார்வது
என்று? " எனக்கூட்டுக.

     வாய்மை வேதம் - ‘சத்தியமே உறுதியாவது' என்று அறையும்
வேதம் - வாய்மையே பேசும் மறை என்றலுமாம்.

     வேத நன்மைத் திரு நீறு - வேதங்களில் விதந்து பேசப்படுவதும்
நன்மையே தருவதுமாகிய திருநீறு. திருநீற்றுப்பதிகம் பார்க்க.

     திருநீற்று உயர் நன்னெறி - திருநீற்றினை உறுதிப்பொருளாய்க்
கொண்டு உயர்வு தரும் நன்னெறி - சைவ நெறி. "நீற்றின் சார்பு" (980),
"மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கமாகும், நன்னெறி" (திருஞான -
புரா - 600) "தேனவில் கொன்றையார்தந் திருநெறி" (மேற்படி 859),
என்பவை காண்க. உயர் - உயர்த்தும். பிறவினைப் பொருளில் வந்தது.
உயர்வாகிய என்றலுமாம்.

     நெறிதாங்கும் தன்மை - நெறியினை மேற்கொண்டு செலுத்தும்
தன்மையுடைய.

     தன்மை மன்னரைப் புவி சார்வது என்க. புவி சார்வது -
உலகம் அரசரது சார்பிலே நிற்கக்கடவது என்ப. "மன்ன னெவ்வழி மன்னுயி
ரவ்வழி" என்பது பழமொழி. சார்வார் - மனத்தினுட் கொள்வாராகி.
முற்றெச்சம். சார்வார் - வந்தனர் என வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. 18

     986. (வி-ரை.) காய்வுற்ற செற்றம் - ஒரு பொருளை நடுநிலையில்
வைத்துக் காணமுடியாது காய்தலையுடைய சினம். செற்றம் - கோபம் -
பகைமை. "காய்தலுவத்த லகற்றி யொருபொருட்கண், ஆய்த லறிவுடையார்
கண்ணதே - காய்வதன்கண், உற்ற குணந்தோன்றா தாகும்" என்பது
நீதியுரை.

     கண்டகன் - கொடியவன். கண்டகம் - கொடுமை. கண்டகம் -
முள் என்று கொண்டு முள்ளினைப்போன்ற துன்பஞ்செய்பவன்
என்றுரைப்பாருமுண்டு.

     செற்றங்கொடு காக்கவும் - மேலெழுந்த செற்றத்தினால் சந்தனங்
கொள்ளுந் துறையை அடைத்து, அது கிடையாமற் காவல்செய்து. உம்மை
இழிவு சிறப்பு. காக்க என்றது வாராமல் காவல்புரிய என்ற பொருளில்
வந்தது.

     ஆய்வுற்ற கொட்பு - பல வழியாலும் ஆராய்ந்து திரியும்
மனச்சுழற்சி. கொட்பு - கருத்து என்றலுமாம்.

     ஏய்வுற்ற நல் சந்தனம் - ஆலவாய்ப் பரமனாருக்குச் சாத்தத்தகுந்த
நல்ல மணமும் குணமும் உடையதாய் முற்றிய உயர்ந்த சந்தனக்கட்டை.

     சிந்தை சாய்வுற்றிட - மனம் ஏக்கம் பொருந்த. "அன்பரும் சிந்தை
நொந்து" (984) என்றவிடத் துரைத்தவை பார்க்க. சிந்தை - தமக்கு அந்தம்
இலவாம் மிறை செய்யவும் அவ்விடுக்கண் ஒன்றினுக்கும் அஞ்சாது
உறைப்புடன் பணிசெய்து வந்த திண்ணிய மனம். திருப்பணிக்குரிய சந்தனம்
பெறாமையால் திண்மை சாய்ந்தது என்க. 19

987.



நட்டம்புரி வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோனரம் பென்பு கரைந்து தேய.      
 20

     (இ-ள்.) வெளிப்படை. "அருட் கூத்தப் பெருமானார் அணியும் நல்ல
திரு மெய்ப்பூச்சுத் திருப்பணிக்கு இன்று முட்டுவந்து நேரும் தன்மை
உண்டாயினும்,