பக்கம் எண் :


810 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

அவன் எண்ணிய அந்தக் களத்திற் கொடிய வாளேந்திய வலிமையுடைய
அவன் வரக்கடவன்" என்று சொல்லி, அச்செயலை மேற்கொண்டவராய், 32

     640. (இ-ள்.) வெளிப்படை. தமது சுற்றத்தார் முதலிய எவரும் இதனை
அறியாதபடி தாமொருவரே, ஒளியுடைய வாளினையும் அழகிய பூணிட்ட
பலகையையும் ஏந்தி வெளிவந்து மற்றவன் முன் சொல்லிவிட்டு வருமாறு
குறித்த அந்தக் களத்திலே பற்றலனாகிய அவனுக்கு முன்னமே சென்று
அவன் வரவினை எதிர்பார்த்துத் தனி நின்றார். 33

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு தொடர்.

     639. (வி-ரை.) இவ்வாறு - இந்தவகைக் குறிப்புக்கள் பெற அவன்
சொல்லியனுப்பிய வரலாற்றை, இரண்டாம் வேற்றுமைத் தொகை.

     அவ்வாறு செய்தல் அழகிது - இது நாயனாரது மன நிகழ்ச்சி.
நாட்டாரைக் கொல்லாது இருவேமும் வேறுபொருதல் சிறந்தது. அழைத்து -
ஒப்பி. நீதிக்குப் பொருந்துவதாகக் காண்டலின் அது நியாயம் என்று
ஏற்றுக்கொண்டு. அழகிது என்பது அமைதற்குக் காரணம்.

     கைவாள் அமர் - கையில் வாளேந்திச்செய்யும் வாட்போர். கை -
வாளுக்கு அடைமொழி மாத்திரையாய் நின்றது. தம் கையே துணையாகப்
பிறிதொரு வரையும் துணைக் கூட்டாது என்று குறிப்புமாம்.

     தான் கருதும் - அவ்வதிசூரன் குறித்துச்சொன்ன.

     அக்களம் - முன்னைப்போர் நிகழ்ந்த, யாவரும் காணத்தக்க
பொதுப்போர்க் களமல்லாத வேறிடம் என மேற் பாட்டிற் அந்தக்களம்.
அகரச் சுட்டு முன் குறித்த அந்த என்றதாம். "முன் சொல்லி வரக்குறித்த
அக்களத்தே" என வரும் பாட்டிலும் இதனையே சுட்டியது காண்க.
வேறொருவரும் அறியாத தனிப்போராதலின் குறித்த இடம் சேர்தல்
அவசியமாயிற்று. நாயனார் அக்கருத்தினை அழகிது என்றமைந்தாராதலின்
அக்குறிப்பினையேகொண்டு அக்களத்திற்கு முன் சென்றனர் என்பது
இருமுறையும் இடத்தையே முதன்மையாய்ச் சுட்டிக் கூறினார். இப்பாட்டில்
அவனுக்கு இடம்பற்றிய இசைவை அறிவித்து, வரும் பாட்டில் அவ்வாறே
இவர் சென்றதனைக் கூறுவதனாற் கூறியது கூறலாகாமையறிக.

     வெவ்வாள் உரவோன் வருக - கொடிய வாளினை யேந்தித் தன்னை
வலியோனாக எண்ணிக்கொண்டவன் வரக்கடவன் என்று சொல்லி.
மேற்கொள்வார் - போரேற்றவராகி.

     கேட்டலும் - ஏனாதிநாதனார் - அமைந்து - களத்தே - உரவோன்
வருக என மேற்கொள்வார் - போந்து - களத்தே - வரவு பார்த்துத்
தனிநின்றார் - என இவ்விரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்
கொள்க. 32

     640. (வி-ரை.) சுற்றத்தார் யாரும் - சுற்றத்தார் எவரேனும் பிறர்
யாரேனும். முன்னர் இவர் புறப்படுதல் கேட்டுத் தாமாகவே ஓடி வந்து
காளையருஞ் சுற்றத்தாரும் சேர்ந்தார் (619) ஆதலின் அவ்வாறு அவர்கள்
காணாவகையாலும், கேள்வியும் படாவகையாலும் என்க. காண்பது - கேட்பது
- என இரண்டு குறிக்க அறியா வகை என்றார்.

     சுடர்வாள் பொற் பலகையும் - வாளும் பலகையும் என உம்மை
வாளுக்கும் கூட்டுக. பொற்பலகை - பொற்பூண் முதலியன இட்டுத் தமது
படையாகக் கொண்ட பலகை. பொன் பூண் முதலியன இட்டுத் தத்தம்
தொழிற் கருவிகளை அழகுபடுத்திக் கொள்ளுதல் தொழிற்றுறை வழக்கு.
பொன் - அழகு என்றலுமாம்.

     கூர்வாள் ஒளியுடைய வாள். முன்னான் (638) தனது ஒளி காணச்
சுற்றி வரும் வட்டணையில் மாற்றானைப் புறகிடச் செய்தற்குத் துணையாக
யிருந்தது வாளின் சுடர். ஆதலின் அதனையே இங்குச் சுட்டினார். அந்தச்
சுடர் வாள்