பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்226

இயல்பு பற்றிய ஆராய்ச்சியான் எழும் காலமும் நிகழ இடமில்லை; அவருட்
சிவனைப்பாடினோரே இப்புலவர் என்று வரையறுத்தமையால் சங்கப் புலவரென்போர்
பலரும் பாடியனவாகக் கிடைக்கும் பற்பலவேறு சமயத் திறம்படவரும் பாட்டுக்களின்
பொருள் பற்றி எழும் பூசலும் நிகழ இடமில்லை. திருவாலவா யரன் சேவடிக்கே -
கவி - பாடும் - சங்கமிருந்து தமிழாராய்ந்து பாடிய இடம் (உத்தர) மதுரையாதலானும்,
அவர் தலைச் சங்கத்துத் தலைப்புலவனாராதலாலும் ஆலவாயுடைய அவரைப்பாடும்
என்றார். சேவடிக்கே - புலவர்களே - ஏகாரங்கள் பிரிநிலை; இதனை மலரடிக்கே
(3939); “சடையார் தமையல்லாற் சொற்பதங்கள் வாய்திறவா” (3940); “மெய்யடிமை
யுடையாராம் பெரும்புலவர்” (3939) என்று விரிநூலுள் விரித்தமை காண்க.
சேவடிக்கே......பாடும் - இவ்வியல்புகளுள், பொருளமைத்து இன்பக் கவிபாடும்
என்பது “செய்யுணிகழ்” (3939) என்ற திருப்பாட்டிலும், சேவடிக்கே - பாடும் என்பது
“பொற்பமைந்த” (3940) என்ற திருப்பாட்டிலும் விரிநூல் வரித்துரைப்பது காண்க.
இன்பக்கவி - பேரின்பமாகிய வீடுபேறளிக்கும் கவி, சிவன் புகழ்பாடுதலால். புலவர் -
புலம்
- பேரறிவு.
     [குறிப்பு;- 49 பேர் புலவர்கொண்ட சங்கமதில் சிவனையேபாடிய புலவர்களைப்
பற்றிய இப்பாட்டு திருவந்தாதியில் 49 வது பாட்டாக வருதல் திருவருட்குறிப்பாம்.]
 
     விரி;- 3939. (இ-ள்) செய்யுணிகழ்.....துணிந்து - செய்யுள்களாக நிகழவரும்
சொற்களைத் தெளிதலையும், செம்மைதரும் பயனுடைய நூல்கள் பலவற்றை
நோக்குதலையும் மெய்த்தவாறு உணர்கின்ற உணர்ச்சியின் பயனாவது இதுவேயாகும்
என்று துணிந்து; விளங்கி......ஆளானார் - விளங்கி ஒளி வீசுகின்ற விடத்தினை
அணிகின்ற கண்டத்தினை உடைய இறைவரது மலர்போன்ற திருவடிக்கே
ஆளானவர்களே; பொய்யடிமையில்லாத.....மிக்கார் - பொய்யடிமையில்லாத புலவர்
என்ற புகழான் மிகுந்தவர்கள்.
 
     (வி-ரை) செய்யுணிகழ் சொல்தெளிவும் என்றதனால் சொல்லும், செவ்விய
நூல்பல நோக்கும்
- என்றதனால் பொருளும் உணர்த்தப்பட்டன; முன்னதில்
எழுத்தும் சொல்லும் யாப்பும், அணியும் ஆகிய நான்கும், பின்னதில் பொருள் என்னும்
பொருளிலக்கணம் ஒன்றுமாக தமிழிலக்கணமைந்தும் பெறப்பட்டமையும் காண்க.
“உரையின் வரையும் பொருளி னளவும், இருவகைப்பட்ட எல்லை” (பட்டினத்தடிகள்).
 
     செய்யுள் - செய்யப்படுவது; “பல சொல்லாற் பொருட் கிடனாக
வல்லோரணிபெறச் செய்வன செய்யுள்”; இவற்றினியல்பெல்லாம் தொல்காப்பியம்
செய்யுளியல், யாப்பருங்கலம் முதலியவற்றுட் காண்க.
 
     செய்யுள் நிகழ் சொல் தெளிவு - நிகழ்தல் - விளங்க நிலைத்தல்; சொல்
தெளிதலாவது
இடம் காலம் நுதலிய பொருள் முதலியவற்றுக்கேற்ற சொற்களைத்
தெளிந்து கொள்ளுதல்; இதனாற் சொல்லிலக்கணமும் எழுத்திலக்கணமும்
வரையறைபடத் தேர்தல் அடங்கியவாறு,.
 
     செவ்வியநூல் பலநோக்கும் - செவ்விய - செம்மை தரவல்ல; இதனால்
விழுமியபொருளிலக்கண வரம்பும், அதனுள் சிறந்த இறைவன் புகழ்பாடும் நிலையும்
கொள்ளப்பட்டன; நோக்குதல் ஊன்றிய கருத்தானுணர்தல்; இதனாற் பொருணூல் வகை
கூறப்பட்டது; “பொருளமைத்து” என்பது வழிநூல்.
 
     மெய்யுணர்வின் பயன் - தெளிவும் நோக்கும் மெய்யாக உணரும் உணர்வின்
பயன்.