பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்302

     வகை: கம்பக் கரிக்கும்.....நாதற்கு - தம்முட் பகைபூண் டொழுகிய நடுக்கம்
விளைக்கும் யானைக்கும் சிலந்திக்கும் ஒருங்கே அருள் நல்கிய
நுதற்கண்ணையுடையவராகிய தேவர்களுக்கு இறைவராம் சிவபெருமானுக்கு;
ஒளி...உடலிலனாய் - ஒளிதரும் திருவிளக்கேற்றுவதற்கு வேண்டும் பொருள்
இல்லாதவராய்; கும்ப....உழன்றும் - குடத்தில் எண்ணெய் கொண்டு விற்றும், செக்கு
ஒட்டிப் பணிபுரிந்தும்; கொள் கூலியினால் - பெற்ற கூலியினாலே; நம்பர்க்கு எரித்த
கலி - இறைவருக்குத் திருவிளக்கு எரித்த கலியர் என்பவர்; ஒற்றி மாநகர்ச் சக்கிரியே
- திருவொற்றியூரில் வாழும் செக்காரக் குலத்தினராவர்.
 

     கம்பக்...நல்கிய - தம்முள் மாறுபட்ட யானைக்கும் சிலந்திக்கும் ஒருங்கே பேறு
அருள் புரிந்தவர்; கோங்செங்கட் சோழர் புராணம் பார்க்க. கண்ணுதலாகிய நம்பற்கு
- என்க. உடல் - பொருள் என்ற கருத்தில் வந்தது. உயிர் இயங்குதற்கு உடல்
கருவியாதல் போலக், குறித்த அறம் புரிவதற்குப் பொருள் கருவியாகும் என்பது.
 

     கும்பத் தயிலம் விற்றும் - செக்குழன்றும் - பிறர்பால் குடத்தில் எண்ணெய்
மாறிக் கொண்டுபோய் விற்றுவந்தும்; செக்கு ஆட்டும் களத்தில் பணிபுரிந்தும்; எரித்த
- விளக்கு எரித்த; விளக்கு என்பது அவாய் நிலையான் வந்தது; முன்
விளக்கேற்றற்கு
என்றதனைத் தொடர்ந்து விளக்கு எரித்த என்க. கலி - கலியர்; கலி
- சக்கிரியே என்று கூட்டுக. பெயர்ப் பயனிலை. சக்கிரி - செக்கார வாணிப
வினைஞர்க்கு வழங்கும் மரபுப் பெயர்.
 

     பெயரும் ஊரும் வரலாறும் பண்பும் வகைநூல் வகுத்துரைத்தது. இவை விரிந்த
படி விரிநூலுட் கண்டுகொள்க.
 
     விரி: 4022. (இ-ள்) பேருலகில்...திருப்பதியாகும் - பெரிய இவ்வுலகிலே
புகழினால் ஓங்கிய பெருமையுடைய தொண்டை நன்னாட்டில்; நீர் உலவும்....பதியாகும்
- கங்கையாறு உலவும் சடைக் கற்றையினையுடைய நிருத்தர் எழுந்தருளியுள்ள
பதியாகும்; காருலவு...திருவொற்றியூர் - மேகங்கள் தவழ்வனவாகி மலர்கள் நிறைந்த
சோழைசூழ்ந்த கன்னிமதில் பக்கமெல்லாம் சூழ்ந்து தேர் உலாவுதற்கிடமாகிய நீண்ட
வீதிகள் சிறந்த திருவொற்றியூர் என்னும் பதி.

1
 

     (வி-ரை) பேருலகில்...நன்னாட்டு இதனால் இச்சரிதமுடைய நாயனாரின் நாட்டுச்
சிறப்புரைத்தவாறு. புகழ் - பெரு(மை) - நன்(மை) என்ற மூன்றடை மொழிகளாலும்
அச்சிறப்புக் குறித்தது கவிநயம். இவையெல்லாம் முன்னர்த் திருக்குறிப்புத் தொண்ட
நாயனார் புராணத்துள் விரிக்கப்பட்டன வாதலின் இவ்வாறு அடைமொழிகளாற் சுட்டி
யமைந்தார். பெருக்கம் ஆண்டுக் கண்டுகொள்க.
 
     சீருலவும்.....திருப்பதி - இத் திருநகரத்தின் உயிரியல் நிலைபற்றிய தெய்வச்
சிறப்பும்; காருலவு.....சிறந்த - உலகியல் நிலையில் உள்ள நகர் வளமுமாம். சிறப்புப்
பற்றி முன்னையதை முன்வைத்துக் கூறினார்.
 
     கன்னிமதில்- தோன்றிய நாள்முதல் பகைவர்களால் அழிக்கப்படாது
தோன்றியவாறே நிற்கும் நிலைபற்றிக் கன்னி என்பது மரபு. கட்டழியாமை.
 
     நிருத்தர் - இப்பதியில் தியாகேசரும் நிருத்தமுடையராகும் குறிப்பு; தியாகேசரும்
ஆடுமாறு வல்லார்.                                                  1
 
4023. பீடுகெழும் பெருந்தெருவும் புத்தருடன் பீலியமண்
வேடமுடை யவர்பொருள்போல லாகாச வெளிமறைக்கும்