பக்கம் எண் :

பெரியபுராணம்305

   

வெயிலணிபன் மணிமுதலாம் விழுப்பொருளா வனவிளக்கும்
தயிலவினைத் தொழின்மரபிற் சக்கரப்பா டித்தெருவு         5
 

     (இ-ள்) எயிலணையும்.....பதியதன்கண் - மதில்களை அணைகின்ற மேகங்களின்
ஓசையும், எறிகின்ற அலைகளையுடைய கடலினது ஓசையும், பயிலப்படுகின்ற பல
இயங்களின் ஓசையும், ஆகிய இவைகூடிப் பிரித்தறிய முடியாதபடி சத்திக்கின்ற
அப்பதியில்; தயிலவினை.......சக்கரப்பாடித் தெருவு - எண்ணெய் ஆட்டும் செக்குத்
தொழிலுடைய மரபினர் வாழ்கின்ற சக்கரப்பாடித் தெரு என்பது; வெயிலணி...விளக்கும்
- ஒளி வீசுகின்ற பலவகை மணி முதலாகிய தூய பொருள்கள் விளக்குந்
தன்மையுடையது.
 

     (வி-ரை) பொருள் - தெரு - விளக்கும் என்று கூட்டுக.
 
     முறை தெரியா - மூன்று முழக்கங்களும் இவை இன்னவென வேற்றுமை காண
முடியாத நிலை.
 
     விழுப்பொருளாவன - பொருள், தெருவு விளக்குதலாவது
அவ்விழுப்பொருள்கள் வீசும் ஒளியினால் தெரு விளங்குதல். இத்தெருவில்
வாழ்வோரது செல்வநிலை; அத்தெருவில் தயிலவினையாளர் வைக்கும்
பெருவிளக்குகளால் அப்பொருள்கள் இரவினும் விளக்கம் வெபறுவன என்பதுமாம்.
தயிலவினைத் தொழிலாவது செக்கு உழன்று எண்ணெய் எடுத்து விற்கும் செக்கார்
என்னும் மரபின் குலத்தொழில். (செக்கார் - செக்கின் றொழிலுடையவர்)
 
     சக்கரப்பாடி - சக்கர எந்திரத்தாற் றொழில் செய்து வாழும்மரபினர் வாழுமிடம்.
சக்கிரி - செக்கான் - செக்கையுடையவர் என்பது நிகண்டு.
 

     5
 

4027. அக்குலத்தின் செய்தவத்தா லவனிமிசை யவதரித்தார்
மிக்கபெருஞ் செல்வத்து மீக்கூர விளங்கினார்;
தக்கபுகழ்க் கலியனா ரெனுநாமந் தலைநின்றார்;
முக்கணிறை வர்க்குரிமைத் திருத்தொண்டி னெறிமுயல்வார்;              6
            
4028. எல்லையில்பல் கோடிதனத் திறைவரா யிப்படித்தாம்
செல்வநெறிப் பயனறிந்து திருவொற்றி யூரமர்ந்த
கொல்லைமழ விடையார்தங் கோயிலினுள் ளும்புறம்பும்
அல்லுநெடும் பகலுமிடுந் திருவிளக்கி னணிவிளைத்தார்.                7
 
     4027. (இ-ள்) அக்குலத்தின்......அவதரித்த அந்தக் குலம் செய்த முன்னைத்
தவத்தின் பயனாக அதில் வந்து அவதரித்தார்; மிக்க....விளங்கினார் - மிகுந்த
பெரியசைவத்தில் மேலோங்க விளங்கினார்; தக்க....தலை நின்றார் - தகுதியாகிய
கலியனார் என்னும் பெயர் பூண்டு சிறந்து நின்றார்; முக்கண்.....முயல்வார் - மூன்று
கண்களையுடைய சிவபெருமானுக்கு உரிமையாகிய திருத்தொண்டின் நெறியிலே
ஒழுகுவாராகி;
 
     4028. (இ-ள்) எல்லையில்.....இறைவராய் -அளவற்றதாகிய பலகோடி
செல்வத்துக்கு அதிபராகி; இப்படித்தாம்.....அறிந்து - இத்தன்மைத்தாகிய செல்வம் வந்த
வழியின் பயனை அறிந்து; திருவொற்றியூரமர்ந்த - விளைத்தார். - திருவொற்றியூரில்
விரும்பி எழுந்தருளிய கொல்லை யிள விடையினையுடைய இறை