அடிகள்தம்மை யந்தமின்ஞான
சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர் தம்மேற்
பழிபோமே. 11
திருச்சிற்றம்பலம்
___________________________________________________
கொண்ட தென்றல், முன்றிலில் வந்து
உலாவும் ஒலிமிக்க காழிப் பதியில்
வீற்றிருக்கும் அடிகளை, முடிவற்ற புகழை உடைய ஞான
சம்பந்தன் இவ்வுலகிடைப் போற்றிப் பாடிய
பாடல்களை வல்லவர்கள் மேல் வரும்பழிகள்
போகும்.
கு-ரை: ஞானசம்பந்தன் காழி அடிகளைப்
பாடிய பாடல் வல்லவர் பழி நீங்கும் என்கின்றது.
தென்றல் செங்கழுநீர்ப் பூவில் அளைந்து
முன்றிலில் உலாவும் காழி என்க. வடி - மா. கொங்கு -
தேன். கடி கொள் - மணத்தைக் கொள்ளுகின்ற.
படிகொள் பாடல் - ஒப்பினைக்கொண்ட பாடல்.
நால்வர் நான்மணி மாலை
வல்லார்
பிறப்பறுப்பர் வண்மை நலங்கல்வி
நல்லா தரவின்ப ஞானங்க - ளெல்லாந்
திருஞான சம்பந்தன் சேவடியே யென்னு
மொருஞான சம்பந்த முற்று.
- சிவப்பிரகாச சுவாமிகள்.
திருவருணைக் கலம்பகம்
ஆரும் விரும்பிய
கல்விமேல் ஆசை உமக்குள தாயிடின்
பாருற வென்பொரு பாவையாப்
பாடிய பாவலர் போலவே
நீரும் அருந்தமிழ் செப்பிடும் நீர்மைய றிந்தவ ணேகுவீர்
மேருநெ
டுஞ்சிலை யத்தனார் வீறரு ணாபுரி வெற்பரே.
- சைவ எல்லப்ப நாவலர்.
|
|