114. திருமாற்பேறு
பதிக வரலாறு:
55 - ஆம் பதிகம் பார்க்க.
பண் : வியாழக்குறிஞ்சி
பதிக எண்: 114
திருச்சிற்றம்பலம்
1228. குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவ னாணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே. 1
1229. பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே. 2
__________________________________________________
1. பொ-ரை: குருத்தாக, தளிராக,
மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவனும்,
பெருந்தகையாய்ப் பெண் ஆண் வடிவோடு
விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர்
போன்ற கண்களை உடைய உமையம்மையால்
விரும்பப்படுபவனும்; அரிய மருந்தாய் விளங்குபவனும்
ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு.
கு-ரை: இப்பதிகம், மருந்தாய்,
மாறிலியாய், உமாபதியாய் கயிலாய பதியாய்.
காலகாலனாய், முனிவரும் தேவரும் மக்களும் ஒருசேர
வணங்கத்தகும் எளிமையனாய் மாதுடையனாய், பிறை
முதலிய சூடியவனாய், எந்தையாய் இருப்பவன் நகர்
மாற்பேறு என்கின்றது. குருந்தவன் -
குருந்தமரத்தடியிற் குருவானவன். இவ்வுரை
மாணிக்கவாசகர் காலத்துக்கு ஞானசம்பந்தப்
பெருமான் பின்னவராயிற்கொள்ளலாம். குருந்து -
குருத்து எனலும் ஆம். குருகவன் - வயிர வகையில்
ஒன்றானவன். மருந்து - அமுதம்.
2. பொ-ரை பருந்தால் நெருங்கப்பட்ட
புலால் நீங்கிய அழகிய வெள்ளிய தலையோட்டைக்
கையில் ஏந்தி, உலகியலில் வேறுபட்ட அழகுடன்
சென்று பலியேற்கும் வேட்கையனாய் மேனி முழுதும்
|