பக்கம் எண் :

 114. திருமாற்பேறு1083


கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே. 5

1233. பெண்ணினல் லாளையோர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே. 6

* * * * * * * * 7

1234. தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய வண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே. 8

__________________________________________________

பிறையணிந்த சடைமுடியனும், உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டவனும், விடக்கறை பொருந்திய மிடற்றினை உடைய தலைமையாளனும், காலனைச் செற்றுகந்த மறையவனுமான சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

கு-ரை: துறையவன் - பல நெறிகளாய் இருப்பவன். தொழிலவன் - ஐந்து தொழிலையுடையவன். கறை - விடம்.

6. பொ-ரை: பெண்களிற் பேரழகினளாகிய உமையம்மையை ஒரு பாகமாக வைத்திருந்தும் தனது நெற்றிக் கண்ணால் காமனை நீறாக்கி அழித்தவனும், தேவர்கள், அசுரர்கள் முனிவர்கள், மண்ணுலக மக்கள் ஆகியோரால் வணங்கப் பெறுபவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

கு-ரை: உமையையொருபாகம் வைத்தும் மன்மதனைக் கண்ணாற் காய்ந்தவன் என்பதில் நயம்ஓர்க. விண்ணவர் முதலானோர் ஒப்ப வணங்கத்தகும் எளிமையில் இருப்பவன் என இறைவனுடைய ஒப்பநோக்கும் பேரருள் உரைக்கப்பட்டது.

7. * * * * * * * * *

8. பொ-ரை: குற்றமற்ற கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில் கால்விரலால் அடர்த்துப் பின்