பக்கம் எண் :

1084திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1235. செய்யதண் டாமரைக் கண்ணனொடும்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயனன் சேவடி யதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே. 9

1236. குளித்துணா வமணர்குண் டாக்கரென்றும்
களித்துநன் கழலடி காணலுறார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே. 10

_________________________________________________

அவன் பிழை உணர்ந்து முறையோடு வேத கீதங்களைப் பாட அருள்புரிந்த ஆதியானாகிய அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள் தலைவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

கு-ரை: மாதி - மாதினையுடையவன்.

9. பொ-ரை: சிவந்த தண் தாமரை மலர் போன்ற கண்களை உடைய திருமாலும், கொய்து அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை விருப்போடு நினைந்து வழிபட அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளிய வளநகர், மாற்பேறாகும்.

கு-ரை: ஐயன்நன்சேவடி - தலைவனுடைய நல்ல சேவடியை மையல் - விருப்பம்.

10. பொ-ரை: குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும், பருத்த உடலினராகிய புத்தர்களும், களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப் பெறார். ஒரு கலைப் பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

கு-ரை: ‘கூழாயினுங் குளித்துக் குடி‘ என்பது உலக வாய்மொழியாகவும் குளித்து உண்ணாத அமணர்கள் என அவர்கள் இயல்பு கூறியது.

குண்டு ஆக்கர் - பரு உடலராகிய புத்தர்.