பக்கம் எண் :

1124திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1299. வன்றிற லவுணர்தம் வளநக ரெரியிடை
வெந்தற வெய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர்மெல்விரல் பாகமதாகிதன்
அந்தமில் வளநக ரந்தணை யாறே. 7

1300. விடைத்தவல் லரக்கனல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தலத்தாலிறை யூன்றிமற் றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநக ரந்தணை யாறே. 8

__________________________________________________

முதல்வனும், அழகு விளங்கும் என் பொன்னாக இருப்பவனும், குற்றமற்ற வேதியர்களால் தொழப்பெறும் அன்பனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

கு-ரை: வலியுடையனை, முனிவரும் தேவரும் வணங்கும் இன்ப வடிவனை, என் பொன்போன்றவனை, அந்தணர் வணங்கும் அன்பனை உரிமையாக உடைய தலம் ஐயாறு என்கின்றது. முன்பு - வலிமை. இணையில இறைவனை - ஒப்பற்ற முதல்வனை. எழில் - அழகு. அன்பன - அன்பனுடையதான

7. பொ-ரை: பெருவலி படைத்த அவுணர்களின் வளமையான முப்புர நகர்களும் தீயிடையே வெந்தழியுமாறு கணை எய்தவனும், விளங்கிய மார்பகத்தே பந்தணை மெல் விரலியாகிய உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது அழிவற்ற வளநகர் அழகும் தண்மையுமுடைய ஐயாறாகும்.

கு-ரை: திரிபுரங்கள் தீயிடை வேவ எய்தவன், பந்தணை விரலியைப் பாகங்கொண்டவன் வளநகர் ஐயாறு என்கின்றது. அந்தம் இல் - அழிவில்லாத.

8. பொ-ரை: செருக்கோடு வந்த வலிய இராவணன் நல்ல கயிலை மலையைப் பெயர்த்த அளவில் தனது அடித்தலத்தால் சிறிது ஊன்றி, அவ்விராவணனின் முடிகள் அணிந்த தலைகள், தோள்கள் ஆகியவற்றை முறையே நெரித்தருளிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

கு-ரை: இராவணனை அடித்தலத்தால் அடர்த்தவன் நகர்