1297. வானமர் மதிபுல்கு சடையிடை யரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநக ரந்தணை யாறே. 5
1298. முன்பனை முனிவரோ டமரர்க ளடிதொழும்
இன்பனை யிணையில விறைவனை யெழில்திகழ்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநக ரந்தணை யாறே. 6
__________________________________________________
வளரத்தக்க பிறை, பரந்து விரிந்து
வந்த கங்கை ஆகியன தோய்ந்தெழும் சடையினனும்,
பழமையான நான்கு வேதஙங்கள் ஆறு அங்கங்கள்
ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தருளியவனும் ஆகிய
சிவபிரானது நகர் அழகும்தண்மையும் உடைய
திருவையாறாகும்.
கு-ரை: திரிபுரம் எரித்தவன்,
பிறையும் நீரும் பொருந்திய சடையினன், வேதம்
அங்கம் இவற்றை யாய்ந்தவன் நகர் ஐயாறு
என்கின்றது. வாய்ந்த - வரங்களின்
வன்மைவாய்ந்த. ஆய்ந்தவன் - ஆராயப் பெற்றவன்.
வேதங்களை ஆயவேண்டிய இன்றியமையாமை
இறைவற்கின்றாதலின் வேதங்களால் ஆராயப்
பெற்றவன் என்பதே பொருந்துவதாம்.
5. பொ-ரை: வானின்கண் விளங்கும்
பிறைமதி பொருந்திய சடையின்மேல் பாம்பையும்.
தேன் நிறைந்த கொன்றையையும் அணிந்தவனும்,
விளங்கும் மார்பினை உடையவனும், மான்போன்ற
மென்மையான விழிகளை உடைய உமையம்மையை ஒரு
பாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர்
அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.
கு-ரை: பிறையணிந்த சடையில்
பாம்பையும் கொன்றையையும் சூடியவன், விளங்கும்
மார்பினையுடையவன், உமையொருபாதியன் வளநகர்
ஐயாறு என்கின்றது. வானமர் மதி என்றது மதியென்ற
பொதுமைநோக்கி. ஒர் பாகம் ஆனவன் என்பதற்கு
இடப்பாகம் கொண்டவன் என்றுரைப்பினும் அமையும்.
6. பொ-ரை: வலிமையுடையவனும்
முனிவர்களும் அமரர்களும் தொழும் திருவடிகளை உடைய
இன்ப வடிவினனும், ஒப்பற்ற
|