1375. பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி. 6
1376. செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில். 7
_________________________________________________
நின்றது. புரந்தவன் எனற்பாலது
புரத்தவன் என வலித்தல் விகாரமாயிற்று.
விளக்கத்தையுடைய நவரத்தினங்களாலே
அலங்கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த
திருத்தோணிபுரத்திலே வீற்றிருக்கும் சிவன்
இத்தன்மையன்.
6. கு-ரை: பூமியிலுள்ளாரையும்
தேவகணங்களாய உள்ளாரையும் தனது நாபிக்
கமலத்திலே தோற்றுவிக்கப்பட்ட பிர்மா விஷ்ணு
வினது போதத்திலே கண்ணாடியும் நிழலும் போலப்
பிரதிவிம்பியா நின்றவன். ஆடி என்பது அடி எனக்
குறுகிநின்றது. மலத்திரயங்களைக் கழுவப்பட்ட
சிவஞானிகள் கூட்டம் பொலிவு பெறத்தக்க
வனப்பையுடைய ஆனந்தநிருத்தம் செய்தருள்பவன்.
சர்வாங்கமும் உத்தூளனம் பண்ணின மார்பை உடைய
சிவஞானிகளும், புண்ணியபாவக்கட்டையரிந்து
விசுவத்தைத் தள்ளப்பட்ட சிறப்பையுடையருமாயிரா
நின்றவர்களுக்கு மிகுதியான மூலமாயுள்ளவன்.
உந்தராய் என்பது ஊந்தராயென நீண்டது. மறுவிலா
மறையோர் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும்
திருப்பதியின்கண் வீற்றிராநின்ற சிவனது அழகிய
திருவடித் தாமரை என்னை ஆண்டிடுவதாக. பூந்தராய்
என்பது சீகாழி.
7. கு-ரை: தனது
திருவடிப்பிரசாதமில்லாதார்க்கு மல மயக்கத்தின்
மேலீட்டைக்கெடாத சிவனுக்கு விசுவாதீதமான
இருப்பிடம் எனது சைதன்னியமே. சத்தாதிகளஞ்சும்
சேரப்பட்ட உலகத்தைத் தன் வாயினிடமாகவுடைய
விஷ்ணுவின் களேபரத்தைத் திருமேனி யிலே
தரித்துள்ளான். சேர் எனற்பாலது செர் எனவும்,
சீர் எனற்பாலது சிர் எனவும் குறுகிநின்றன. ஆத்தும
விகாரமாகிய கர்மத்தினாலே இந்திரியங்களுக்கு
விடயமாகிய சுவர்க்கத்திலிச்சை யுடையானுக்கு
அந்தச் சுவர்க்கம் மெய்யாக
விசேடித்திருக்குமன்றே. இந்திரிய வன்மையாகிய
யுத்தத்துக்கு இளையாமல் அந்த இந்திரியமாகிய
|