பக்கம் எண் :

1238திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை யடிகளே. 8

1456. நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும்மறி யாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றன்மிக்க வடிகளே. 9

1457. திருவிலிச்சில தேரமணாதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயி லெய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே. 10

_________________________________________________

விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.

கு-ரை: தசக்கிரிவன் - இராவணன்.

9. பொ-ரை: திருப்பராய்த்துறையில் ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள், மணம் பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன், திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப் பெறாத தோற்றத்தினை உடையவர். தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவர்.

கு-ரை: நாற்றம் - மணம். பாற்றினார் - சிதற அடித்தார்.

10. பொ-ரை: புண்ணியமில்லாத சிலராகிய புத்தர்களும், சமணர்களாகிய, கீழ்மக்களும், கூறும் பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர். பெரிய மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்தழித்து உலகைக் காத்துத் திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக.

கு-ரை: திரு - சிவஞானம். தேரர் - புத்த சமயத்தினர். ஆதர் - கீழ்மக்கள். பரு வில் - (மலையாகிய) பெருத்த வில். எயில் - திரிபுரம். வாழ்த்தும் - வாழ்த்துங்கள்.