பக்கம் எண் :

 3. திருவலிதாயம்285


வாசிதீரவடி யார்க்கருள்செய்து

வளர்ந்தான்வலிதாயம்

பேசுமார்வமுடை யாரடியாரெனப்

பேணும்பெரியோரே. 10

33. வண்டுவைகும்மண மல்கியசோலை

வளரும்வலிதாயத்

தண்டவாணனடி யுள்குதலாலருண்

மாலைத்தமிழாகக்

கண்டல்வைகுகடற் காழியுண்ஞானசம்

பந்தன்றமிழ்பத்துங்

கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர்

வானத்துயர்வாரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

அன்பின்றியும் பேசும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாதீர். குற்றம் தீர, அடியவர்கட்கு அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும் ஆர்வம் உடையவர்களே, அடியார்கள் என விரும்பப்படும் பெரியோர் ஆவர்.

கு-ரை: இது, ஏற்றத்தாழ்வற அடியார் எல்லார்க்கும் அருள் செய்யும் வலிதாயத்தைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவார் என்கின்றது. ஆசியார மொழியார் - ஆசிகளை நிரம்பச்சொல்லும் மனப்பண்பற்ற சமணர்கள். அல்லாதவர் - சைவத்திற்குப் புறம்பானவர்கள். ஏசி - இகழ்ந்து, ஈரம் - அன்பு. பொருள் என்னேல் - உறுதிப் பொருளாகக் கொள்ளாதே. வாசிதீர - வேற்றுமை நீங்க. இறைவன் வாசிதீரக்காசு நல்கும் வள்ளன்மை விளங்கக் கூறியதுமாம். பேசும் ஆர்வம் - இடைவிடாது பாராட்டிப்பேசும் விருப்பம். ஆர்வம் - அமையாத காதல். பெரியோர் ஆர்வமுடையார்க்கு அடியார் எனப் பேணும் என உருபுவிரித்துப் பொருள்காண்க.

11. பொ-ரை: வலிதாய நாதன்மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க.

வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயத்தில் விளங்கும் அனைத்துலக நாதனின் திருவடிகளைத்