31. பெரியமேருவரை யேசிலையாமலை
வுற்றாரெயின்மூன்றும்
எரியவெய்தவொரு
வன்னிருவர்க்கறி
வொண்ணாவடிவாகும்
எரியதாகியுற
வோங்கியவன்வலி
தாயந்தொழுதேத்த
உரியராகவுடை
யார்பெரியாரென
வுள்கும்முலகோரே. 9
32. ஆசியாரமொழி
யாரமண்சாக்கிய
ரல்லாதவர்கூடி
ஏசியீரமில
ராய்மொழிசெய்தவர்
சொல்லைப்பொருளென்னேல்
__________________________________________________
9. பொ-ரை: வலிதாயத்தை
வணங்குவாரைப் பெரியார் என உலகோர் உள்குவர் என
முடிபு காண்க. தேவர்களோடு மாறுபட்ட திரிபுர
அசுரர்களின் கோட்டைகள் மூன்றையும், மிகப் பெரிய
மேருமலையை வில்லாகக் கொண்டு எரியும்படி அழித்த
ஒருவனும், திருமால் பிரமன் ஆகிய இருவராலும் அறிய
ஒண்ணாத அழல் வடிவாய் உயர்ந்தோங்கியவனும் ஆகிய
சிவபிரானது திருவலிதாயத்தைத் தொழுது ஏத்தலைத்
தமக்குரிய கடமையாகக் கொண்ட உலக மக்கள் பலரும்
பெரியார் என நினைந்து போற்றப்படுவர்.
கு-ரை: இது வலிதாயத்தை
வணங்குவாரே பெரியர் என உலகத்தோர் உள்குவர் என்கின்றது.
பெரிய மேருவரை என்றது மலைகளில் எல்லாம் பெரியதாய்,
தலைமையாய் இருத்தலின். சிலை - வில். மலைவுற்றார்
- சண்டைசெய்த திரிபுராதிகள். எய்த ஒருவன் - அம்பு
எய்து எரித்த ஒப்பற்றவன். இருவர் - பிரமனும் திருமாலும்.
எட்டுக்கண்ணும், இருகண்ணும் படைத்திருந்தும் அறியமுடியாத
அக்கினிப்பிழம்பாகிய அண்ணாமலையாய் நின்ற
இறைவன். தாம் தெய்வம் என்று இறுமாப்பார்
இருவராலும் அறிய ஒண்ணாதவன் என்பதாம். ஏத்த உரியராக
உடையார் - பணிதலே தமக்கு உரிமையாக உடைய அடியார்கள்.
உலகோர் உள்கும் - உலகத்தார் நினைப்பர்.
10. பொ-ரை: வலிதாயத்தின்
புகழைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள்
பேணுவர். மனமார வாழ்த்தும் இயல்பினரல்லாத சமணர்
சாக்கியர் ஆகிய புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும்
|