பக்கம் எண் :

298திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


* * * * * * * * * * 2

46. திரைகளெல் லாமல ருஞ்சுமந்து

செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்

கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக்

காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி

உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல

வுத்தம ராயுயர்ந் தாருலகில்

அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க்

காட்செய வல்ல லறுக்கலாமே. 3

__________________________________________________

தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு (அரியர்த்தர், அர்த்தநாரீசுரர்) விளங்கும் இறைவன் மீது பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர், வீட்டுலகை அடைவர்.

கு-ரை: இது, ஆரணிய சுந்தரரைத் தியானித்து நெகிழ்ந்த மனத்தடியவர்கள் மேலுலகடைவர் என்கின்றது. செய் - வயல். வயலருகே நீர்பாய (அதனாற் களித்த) கயல்மீன் ஓங்கிப்பாய, சிலவாகிய மலர்களிலிருந்து தேன், காடெல்லாம்கமழும் காட்டுப்பள்ளி எனவும், கைக்கெட்டுந்தூரத்தில் வாழை, கனிகளை யீன்று கமழ்கின்ற காட்டுப்பள்ளி எனவும் கூட்டிப் பொருள் கொள்க. பையருகுஅழல்வாய்ப்பாம்பு அணையான் - விஷப்பையினருகே அழலுந்தன்மை வாய்ந்த கூரிய விஷப்பற்களையுடைய பாம்பை (ஆதிசேடனை) அணையாகக்கொண்ட திருமால்(போல). உள்கி, விண்டவர் மேலுலகு ஏறுவர் என முடிக்க. திருமால் பாம்பணை மேலிருந்து ஆனந்தத் தாண்டவத்தைத் தியானித்து மனம் நெகிழ்ந்தார் ஆதலின், அவ்வரலாற்றை உட்கொண்டு கூறியதாம். பணை - மூங்கில். மெய்யருகே - மெய்யில்.

2. * * * * * *

3. பொ-ரை: காவிரியின் வாய்க்கால்கள் எல்லா மலர்களையும் சுமந்தும், செழுமையான மணிகள் முத்துக்கள் பொன் ஆகியவற்றை