140. விளங்கும்பிறை சடைமேலுடை
விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு
தமிழ்ஞானசம் பந்தன்
துளங்கில்தமிழ் பரவித்தொழு
மடியாரவ ரென்றும்
விளங்கும்புக ழதனோடுயர்
விண்ணும்முடை யாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: விளங்கும் பிறையைச்
சடைமேலுடைய விகிர்தனாய சிவபிரானது வியலூரை,
இடமகன்ற ஊராகிய புகலியில் தோன்றிய தக்க தமிழ்
ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய துளக்கமில்லாத
இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவித் தொழும்
அடியவர், எக்காலத்தும் விளங்கும் புகழோடு உயரிய
விண்ணுலகையும் தமதாக உடையவராவர்.
கு-ரை: விகிர்தன் - சதுரப்பாடுடையவன்.
தளம் - இடம். துளங்குஇல் தமிழ் - நடுக்கமில்லாத தமிழ்.
திருவையாற்றுப் புராணம்
வீதி கண்டவர் சீசீசீயென வேத
வஞ்சகர் பாழ்வாய்
வீணர்கள்
வாதி டுஞ்சமண் வேரோ டேயற;
வாழ்க
அந்தணர் வானோரான்என
ஓது பண்டித ஞானா சாரியன்
யோக சிந்தையன்ஓதா தோதிய
வாதி வெங்குரு நாடாள்
வேதியன்
ஆய புங்கவன் மேன்மேல் வாழிய.
- ஞானக்கூத்தர். |
|